/* */

சென்னையில் ரவுடிகளின் அட்டகாசத்தை ஒழிக்க தனிப்படை: காவல் ஆணையர்

ரவுடிகளின் அட்டகாசத்தை ஒழிக்க, சென்னை வடக்கு, தெற்கு மண்டலங்களில் தனிப்படை அமைக்கப்படவுள்ளதாக, சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார்.

HIGHLIGHTS

சென்னையில் ரவுடிகளின் அட்டகாசத்தை ஒழிக்க தனிப்படை:  காவல் ஆணையர்
X

சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால்

சென்னையில் பணிபுரியும் பெண் காவலர்கள் முதல், பெண் ஆய்வாளர்கள் வரையிலான சுமார் 4,800 பெண் காவலர்களுக்கு சமநிலை வாழ்க்கை முறை குறித்த 3 நாள் சிறப்பு பயிற்சி வகுப்பு, சென்னை புதுப்பேட்டை ஆயுதப்படை துணை ஆணையர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் நிகழ்ச்சியை குத்துவிளக்கேற்றி பயிற்சி வகுப்பை தொடங்கி வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது: ரவுடிகள் அட்டகாசத்தை ஒழிக்க, தமிழக முதல்வர் உத்தரவின் பேரில், சென்னை வடக்கு மற்றும் தெற்கு மண்டலங்களில், உதவி ஆணையர்கள் தலைமையில் தனிப்படை அமைக்கப்படவுள்ளது. ஸ்டிங் ஆப்பரேஷனை பொறுத்தவரை, சென்னையில் 717 இடங்களில் சோதனை நடத்தி சுமார் 70 ரவுடிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ரவுடிகளின் வீடுகளில் இருந்து 13 கத்தி, அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. முக்கிய வழக்குகளில் உள்ள 6 ஆயிரம் ரவுடிகளின் பட்டியல் தயார் செய்யப்பட்டு விசாரணை மற்றும் சோதனைகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 3 மாதத்தில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பில், சென்னையில் கொலை சம்பவங்கள் முன்பைவிட குறைந்துள்ளது என்றார்.

Updated On: 24 Sep 2021 2:15 PM GMT

Related News

Latest News

  1. சோழவந்தான்
    மேலக்கால் கிராமத்தில் அடிக்கடி ஏற்படும் மின்தடையால் மக்கள் அவதி..!
  2. கோவை மாநகர்
    தனியார் பள்ளி வாகனங்களை ஆய்வு செய்த கோவை மாவட்ட ஆட்சியர்
  3. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே வெயிட் லாஸ்... சூப்பர் ஈஸி டிப்ஸ்!
  4. லைஃப்ஸ்டைல்
    சிதறும் மனதைச் சீர் செய்யும் சில வழிகள்
  5. நாமக்கல்
    போலீசாரின் மிரட்டலுக்கு பயந்து செல்போன் டவரில் ஏறி இளைஞர் தற்கொலை...
  6. திருமங்கலம்
    அலங்காநல்லூர் அருகே பேச்சியம்மன் ஆலயத்தில் மண்டல பூஜை..!
  7. சோழவந்தான்
    அலங்காநல்லூர் அருகே காவல் ஆய்வாளர் வீட்டில் நகை, பணம் கொள்ளை..!
  8. இந்தியா
    பெரியவர்களுக்கான சிறைகளில் குழந்தைகள்..! அதிர்ச்சி அறிக்கை..!
  9. இந்தியா
    மோக வலையில் ஏவுகணை ரகசியம்: பாகிஸ்தான் சூழ்ச்சி தோல்வி
  10. இந்தியா
    சூரிய புயல் பூமியைத் தாக்கும் போது ஏற்படும் அரோரா! லடாக் வானில்...