/* */

சுறுசுறுப்பு- அமைதியான நடத்தை: குதிரைக்கு பாராட்டு பத்திரம் வழங்கிய ராணுவ அதிகாரி

‘பிரின்ஸ்’ என்ற குதிரை, குதிரை படையில் மிகவும் அனுபவம் வாய்ந்தது. ஆண்டுக்கு இரு முறை நடைபெறும் பயிற்சி விழாவில் பங்கேற்கிறது.

HIGHLIGHTS

சுறுசுறுப்பு- அமைதியான நடத்தை: குதிரைக்கு பாராட்டு பத்திரம் வழங்கிய ராணுவ அதிகாரி
X

சென்னை ராணுவ அதிகாரிகள் பயிற்சி மையத்தில், தொடர்ந்து 11 பயிற்சி நிறைவு அணிவகுப்பில் பங்கேற்றதை அங்கீகரிக்கும் வகையில், 'பிரின்ஸ்' என்ற குதிரைக்கு, ராணுவ பயிற்சி கட்டுப்பாட்டு மைய தலைவரின் பாராட்டு பத்திரம் வழங்கப்பட்டது.

ராணுவ அதிகாரிகளின் பயிற்சி நிறைவுவிழா மற்றும் பயிற்சி மையத்தின் முக்கிய விழாக்களில் பங்கேற்கும் குதிரைக்கு, ராணுவ உதவியாளர் குதிரை என்ற தனித்துவமான அந்தஸ்து உண்டு.

சென்னையில் உள்ள ராணுவ அதிகாரிகள் பயிற்சி மையத்தில்(OTA) உள்ள 16 வயது 'பிரின்ஸ்' என்ற குதிரை, குதிரை படையில் மிகவும் அனுபவம் வாய்ந்தது. இங்கு ஆண்டுக்கு இரு முறை நடைபெறும் பயிற்சி நிறைவு விழாவில் இது பங்கேற்கிறது. அதன் சுறுசுறுப்பு மற்றும் அமைதியான நடத்தை காரணமாக, அணிவகுப்பில் பங்கேற்க அது சிறந்த முறையில் தேர்வாகியது.

தொடர்ச்சியாக 11 பயிற்சி நிறைவு விழாவில் 'பிரின்ஸ்' பங்கேற்றதை அங்கீகரிக்கும் வகையில், அதற்கு ராணுவ பயிற்சி கட்டுப்பாட்டு மைய தலைவரின் (ARTRAC) பாராட்டு பத்திரத்துடன் கூடிய விருது கடந்த ஆகஸ்ட் 15ம் தேதி வழங்கப்பட்டது. அந்த விருதை, பிரின்ஸ் குதிரைக்கு, சென்னை ராணுவ அதிகாரிகள் பயிற்சி மையத்தின் கமாண்டன்ட் லெப்டினன்ட் ஜெனரல் எம்.கே.தாஸ் இன்று அணிவித்தார்.

Updated On: 2 Sep 2021 8:02 AM GMT

Related News

Latest News

  1. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  2. ஈரோடு
    பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 44 அடியாக சரிவு
  3. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  4. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  5. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  6. கலசப்பாக்கம்
    கலசப்பாக்கத்தில் தண்ணீர் பந்தல் திறப்பு
  7. கோவை மாநகர்
    கோவை நகரில் நள்ளிரவு பெய்த மிதமான மழை: மின்னல் தாக்கி தீப்பிடித்த...
  8. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  9. செய்யாறு
    செய்யாறு கல்வி மாவட்டத்தில் 89.25 சதவீத மாணவர்கள் தேர்ச்சி
  10. திருவண்ணாமலை
    மாதந்தோறும் ஊதியம் வழங்க கோரி தூய்மை பணியாளர்கள் கலெக்டரிடம் மனு