கனமழை எதிரொலி: சென்னையில் கூடுதல் மெட்ரோ ரயில் இயக்கப்படும்

கனமழை எதிரொலி: சென்னையில் கூடுதல் மெட்ரோ ரயில் இயக்கப்படும்
X

கோப்புப்படம் 

சென்னை மற்றும் புறநகர், நெல்லை, தூத்துக்குடி. கள்ளக்குறிச்சி உள்பட 25 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

வடகிழக்குப் பருவமழை தொடங்க உள்ள நிலையில் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மழை தொடங்கி உள்ளது. சென்னையில் இன்று முதல் படிப்படியாக மழை அதிகரிக்கும். அக்டோபர் 15,16-ல் கனமழை முதல் மிக கனமழை பெய்யும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

பருவமழையை எதிர்கொள்வதற்கான முன்னேற்பாடுகளுடன் அரசு தயார் நிலையில் இருப்பதாக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.

சென்னை, திருவள்ளூர், காஞ்சி, செங்கல்பட்டில் ஆகிய மாவட்டங்களில் அடுத்த 5 தினங்களுக்கு கன முதல் மிக கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் பாலசந்திரன் தெரிவித்துள்ளார்.

கனமழை காரணமாக நாளை முதல் 3 நாட்களுக்கு கூடுதல் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, காலை 8 மணி முதல் 11 மணி வரை மற்றும் மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை, பச்சை வழித்தடத்தில் சென்ட்ரல் மெட்ரோ முதல் பரங்கிமலை மெட்ரோ வரை 5 நிமிட இடைவெளியில் மெட்ரோ இரயில்கள் இயக்கப்படும்.

நீல வழித்தடத்தில் விம்கோ நகர் பணிமனை மெட்ரோ முதல் விமான நிலையம் மெட்ரோ வரை 6 நிமிட இடைவெளியில் மெட்ரோ இரயில்கள் இயக்கப்படும். நீல வழித்தடத்தில் வண்ணாரப்பேட்டை மெட்ரோ முதல் அறிஞர் அண்ணா ஆலந்தூர் மெட்ரோ இடையே 3 நிமிட இடைவெளியில் மெட்ரோ இரயில்கள் இயக்கப்படும்.

காலை 5 மணி முதல் 8 மணி வரை மற்றும் காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரை மற்றும் இரவு 8 மணி முதல் 10 மணி வரை: பச்சை வழித்தடம் மற்றும் நீல வழித்தடத்தில் 7 நிமிட இடைவெளியில் மெட்ரோ இரயில்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story