/* */

சென்னை விமான நிலையத்தில் 1422 கிராம் தங்கம் பறிமுதல்

சென்னை விமான நிலையத்தில் 1422 கிராம் தங்கத்தை சுங்கத்துறையினர் பறிமுதல் செய்தனர்.

HIGHLIGHTS

சென்னை விமான நிலையத்தில் 1422 கிராம் தங்கம் பறிமுதல்
X

பறிமுதல் செய்யப்பட்ட தங்கம்.

சென்னை விமான நிலைய சுங்கத்துறையினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், கொழும்பில் இருந்து சென்னை வந்த இலங்கையைச் சேர்ந்த பெண் பயணியை இடைமறித்து சோதனையிட்டதில், 6 பிளாஸ்டிக் பைகளில் வைக்கப்பட்டிருந்த தங்கம் கண்டுபிடிக்கப்பட்டது. 725 கிராம் எடை கொண்ட அந்த தங்கத்தின் மதிப்பு ரூ.37.25 லட்சமாகும்.

மற்றொரு நிகழ்வில் கொழும்பில் இருந்து வந்த ஆண் பயணியிடம் நடத்தப்பட்ட சோதனையில், இரண்டு பண்டல்களில் மறைத்து வைக்கப்பட்டிருந்த தங்க பசை கண்டுபிடிக்கப்பட்டு, பறிமுதல் செய்யப்பட்டது. 697 கிராம் எடை கொண்ட அந்த தங்கத்தின் மதிப்பு ரூ.35.82 லட்சமாகும்.

1962 சுங்கச்சட்டத்தின் கீழ், இந்த இரண்டு நிகழ்வுகளிலும் 1422 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இதன் மதிப்பு ரூ. 73.07 லட்சமாகும். இது குறித்த மேல் விசாரணை நடைபெற்று வருவதாக சென்னை சர்வதேச விமான நிலைய கூடுதல் சுங்கத்துறை ஆணையர் திரு கே பி ஜெயகர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Updated On: 3 April 2023 1:42 PM GMT

Related News

Latest News

  1. கோவை மாநகர்
    பாஜக மாநில பொருளாளர் எஸ்.ஆர். சேகரிடம் சிபிசிஐடி விசாரணை
  2. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  3. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  4. காஞ்சிபுரம்
    ராஜீவ் நினைவிடத்தில் தமிழக காங்கிரஸ் தலைவர் தலைமையில் நினைவு அஞ்சலி
  5. நாமக்கல்
    நாமக்கல்லில் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி நினைவேந்தல் நிகழ்ச்சி
  6. வீடியோ
    🔴 LIVE : Instagram-மில் ஹீரோணி தேடும் SOOR ! பங்கமாய் கலாய்த்த SK !...
  7. லைஃப்ஸ்டைல்
    நகத்த கவனிச்சீங்களா? புற்றுநோய் வர வாய்ப்பிருக்காமே!
  8. மாதவரம்
    கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த ரவுடி கைது
  9. லைஃப்ஸ்டைல்
    சமூக வலைத்தளங்களில் பொங்கல் வாழ்த்துக்களை பகிர்ந்து கொள்வதில் சில...
  10. லைஃப்ஸ்டைல்
    தமிழர் பெருமையை சொல்லும் திருநாள் வாழ்த்துகள்!