சசிகலா காரில் இருந்த அதிமுக கொடி அகற்றம்

சசிகலா காரில் இருந்த அதிமுக கொடி அகற்றம்
X

பெங்களுருவிலிருந்து சசிகலா வந்த காரில் இருந்த அதிமுக கொடி அகற்றப்பட்டது.

பெங்களூரு சிறையிலிருந்து விடுதலையான சசிகலா, கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக அங்குள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். மருத்துவா்களின் அறிவுரைப்படி, பெங்களூருவில் உள்ள பண்ணை வீட்டில் ஒரு வாரம் தங்கியிருந்த அவர் இன்று கிருஷ்ணகிரி மாவட்டம் வழியாக சென்னை வருகிறார்.பெங்களூருவில் இருந்து அவர் பயணிக்கும் காரில் அதிமுக கொடி பொருத்தப்பட்டிருந்தது. இதையடுத்து, காரில் உள்ள அதிமுக கொடியை போலீஸார் அகற்றினர். இதனால் சசிகலா, அதிமுக கொடி பொருத்தப்பட்ட வேறு ஒரு காரில் பயணிக்கிறார்.

Tags

Next Story
ai in future education