Begin typing your search above and press return to search.
அம்பத்தூர்அண்ணா நகர்சேப்பாக்கம்ராதாகிருஷ்ணன் நகர்எழும்பூர்துறைமுகம்கொளத்தூர்மாதவரம்மதுரவாயல்மயிலாப்பூர்பெரம்பூர்இராயபுரம்சைதாப்பேட்டைதியாகராய நகர்திரு. வி. க. நகர்திருவொற்றியூர்ஆயிரம் விளக்குவேளச்சேரிவில்லிவாக்கம்விருகம்பாக்கம்
செல்போன் கடையில் கொள்ளை : 4 பேர் கைது
சென்னை திருவொற்றியூர் பகுதியில் செல்போன் கடையில் பூட்டை உடைத்து கொள்ளையடித்த 4 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.
சென்னை திருவொற்றியூர் சண்முகாபுரம் தெருவை சேர்ந்த திலீப் என்பவர் அதே பகுதியில் செல்போன் கடை நடத்தி வருகிறார். இவர் கடந்த 9ஆம் தேதி தனது செல்போன் கடையின் பூட்டை உடைத்து கடையில் இருந்த 36 செல்போன்களை யாரோ மர்ம நபர்கள் கொள்ளை அடித்துள்ளதாக திருவொற்றியூர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இந்நிலையில் செல்போன் கொள்ளையர்களை பிடிக்க தனிப்படை அமைத்து காவல்துறையினர் விசாரணை நடத்தியதில் செல்போன் திருட்டு வழக்கில் தொடர்புடைய கொருக்குப்பேட்டையை சேர்ந்த பாஸ்கர் (22), கௌரிசங்கர், அரவிந்தன், கார்த்திக் ஆகிய 4 பேரை கைது செய்து அவர்களிடமிருந்து 36 செல்போன்களை பறிமுதல் செய்தனர்.