பேரிச்சம்பழத்திற்குள் வைத்து தங்கம் கடத்தல்

பேரிச்சம்பழத்திற்குள் வைத்து தங்கம் கடத்தல்
X

துபாயிலிருந்து சென்னைக்கு விமானத்தில் வந்த பாா்சலில் பேரிச்சம் பழத்திற்குள் மறைத்து வைத்திருந்த ரூ.15.26 லட்சம் மதிப்புடைய 300 கிராம் தங்கம் சென்னை விமானநிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டது.

துபாயிலிருந்து சென்னை சா்வதேச விமானநிலையத்திற்கு சிறப்பு விமானம் வந்தது.அதில் பயணி இல்லாமல் ஒரு பாா்சல் மட்டும் வந்தது.அந்த பாா்சலுக்கான பயணி ஏற்கனவே சென்னை வந்துவிட்டாா்.சுங்கத்துறையினா் அந்த பாா்சலை சோதனையிட்டனா். அதனுள் பேரீச்சம் பழங்கள் இருந்தன.சந்தேகத்தில் பேரீச்சம் பழங்களை பிரித்து பாா்த்த போது,அதனுள் 2 தங்க டாலா்கள்,2 தங்க பிஸ்கெட்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்தன.அவைகளின் எடை 300 கிராம் என்றும் மதிப்பு ரூ.15.26 லட்சம் என தெரிய வந்தது.இதையடுத்து சுங்கத்துறையினா் தங்கத்தை பறிமுதல் செய்து,அந்த பாா்சலுக்கான பயணியை தேடி வருகின்றனா்.

Tags

Next Story
ai in future agriculture