/* */

கங்கைகொண்ட சோழபுரம் கோவில் புனரமைப்பு தொடர்பாக சென்னை ஐகோர்ட் உத்தரவு

கங்கைகொண்ட சோழபுரம் கோவில் புனரமைப்பு தொடர்பாக சென்னை ஐகோர்ட் உத்தரவு பிறப்பித்து உள்ளது.

HIGHLIGHTS

கங்கைகொண்ட சோழபுரம் கோவில் புனரமைப்பு தொடர்பாக சென்னை ஐகோர்ட் உத்தரவு
X

சென்னை உயர்நீதிமன்றம் (கோப்பு படம்)

நாட்டில் உள்ள அனைத்து புராதன சின்னங்களின் பாதுகாவலர்கள் என்ற முறையில், புராதன சின்னங்களை பாதுகாப்பது இந்திய மற்றும் தமிழக தொல்லியல் துறைகளின் கடமை என சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

அரியலூர் மாவட்டம், கங்கை கொண்ட சோழபுரத்தில், முதலாம் ராஜேந்திர சோழன் ஆட்சி காலத்தில் கட்டப்பட்ட கங்கை கொண்ட சோழீஸ்வரர் கோவில் ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்தது.

யுனெஸ்கோ அமைப்பால் புராதன சின்னமாக அறிவிக்கப்பட்ட இந்த கோவிலில் பாதுகாக்கப்பட்ட பகுதிகளில் கட்டுமானங்கள் மேற்கொள்ள தடை விதிக்கக் கோரி, தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் தாலுகா, டி.மாங்குடியைச் சேர்ந்த வழக்கறிஞர் பாலகுரு என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் அண்மையில் பொது நல வழக்கை தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், இந்திய தொல்லியல் துறை சார்பில் கோவிலில் மூன்று கோடி ரூபாய் செலவில் புத்தக நிலையம், உணவகம், கழிப்பறைகள் என அடிப்படை வசதிகள் ஏற்படுத்தப்பட உள்ளதாகவும், பாதுகாக்கப்பட்ட கோவிலில் புதிய கட்டுமானங்களை மேற்கொள்ள அதிகாரிகள் அனுமதி பெற வேண்டும் எனவும், அனுமதியின்றி கட்டுமானங்கள் மேற்கொள்வது குற்றம் எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி சத்தியநாராயண பிரசாத் அமர்வு, நாட்டில் உள்ள அனைத்து புராதன சின்னங்களின் பாதுகாவலர்கள் என்ற முறையில், புராதன சின்னங்களை பாதுகாப்பது இந்திய தொல்லியல் துறை, மாநில தொல்லியல் துறைகளின் கடமை எனவும், புராதன சின்னங்களுக்கு ஆபத்தை விளைவிக்கும் எந்த செயல்களையும் அவர்கள் மேற்கொள்ளக் கூடாது எனவும் உத்தரவிட்டது.

Updated On: 2 May 2024 8:16 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    தீபாவளி பண்டிகை சுவாரஸ்யங்களும் வாழ்த்துக்களும்
  2. ஆன்மீகம்
    முதல் வணக்கம் எங்கள் முதல்வனுக்கு! - விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்!
  3. பட்டுக்கோட்டை
    கோடை பெருமழையில் இருந்து பயிர் பாதுகாப்பு..! விவசாயிகளே கவனிங்க..!
  4. திருவள்ளூர்
    பெரியபாளையம் அருகே எண்ணெய் ஏற்றி வந்த லாரி தடுப்பு சுவரில் மோதி...
  5. நாமக்கல்
    சாலை விபத்தில் சிக்கியவரை தனது காரில் அனுப்பி வைத்த நாமக்கல் ஆட்சியர்...
  6. திருவள்ளூர்
    திருவள்ளூர் மாவட்ட போலீஸ் எஸ்.பி. அலுவலகத்தில் தஞ்சம் அடைந்த காதல்...
  7. சோழவந்தான்
    சோழவந்தானில், தனியார் பள்ளியில் சலுகைகளுடன் மாணவர் சேர்க்கை..!
  8. சோழவந்தான்
    சோழவந்தான் அருகே, அதிமுக சார்பில் இலவச மருத்துவ முகாம்..!
  9. வீடியோ
    🥳Adhi-யின் 25வது படம் கொண்டாட்டத்தில் PT Sir குழுவினர்🥳 !#hiphop...
  10. ஆன்மீகம்
    தன்மானம் சீண்டப்படும்போது..துணிந்து நில்லுங்கள்..!