/* */

திருக்கழுகுன்றம்: தடுப்பூசி முகாம்-திருப்போரூர் எம்.எல்.ஏ. துவக்கினார்

திருக்கழுகுன்றம் அனுபுரத்தில் தடுப்பு ஊசி முகாமை திருப்போரூர் எம்.எல்.ஏ. எஸ்.எஸ்.பாலாஜி துவக்கி வைத்தார்.

HIGHLIGHTS

திருக்கழுகுன்றம்: தடுப்பூசி முகாம்-திருப்போரூர் எம்.எல்.ஏ. துவக்கினார்
X

அனுபுரம் கொரோனா தடுப்பூசி முகாமை திருப்போரூர் எம்எல்ஏ எஸ்.எஸ்.பாலாஜி தொடங்கி வைத்தார்.

கொரோனா நோய் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் ஆங்காங்கே மருத்துவ முகாம் அமைத்து 18 வயது முதல் 45 வயது வரை உள்ளவர்களுக்கு கோவிஷில்டு தடுப்பூசி போடும் பணியை அரசு அறிவித்துள்ளது. செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் ஒன்றிய நெய்க்குப்பி ஊராட்சி அனுபுரம் பொது மக்களுக்கான இலவச தடுப்பு ஊசி சிறப்பு முகாம் நடைப்பெற்றது.

சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில துணை பொது செயலாளரும், திருப்போரூர் எம்.எல்.ஏ.வுமான எஸ்.எஸ்.பாலாஜி முகாமினை துவக்கிவைத்து பொதுமக்களிடையே அவர்களின் தேவைகள் குறித்து கேட்டறிந்தார். மேலும், அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ளுங்கள் என்றும் தனி மனித இடைவெளியை பின்பற்றி அரசு கூறும் ஆலோசனைகளை பின்பற்றுமாறு கேட்டுக்கொண்டார்.

இவருடன் திருக்கழுக்குன்றம் வட்டார மருத்துவர் கவிதா, திமுகவை சேர்ந்த திருக்கழுக்குன்றம் ஒன்றிய அவை தலைவர் நல்லூர் ஜெயராமன், மாவட்ட பிரதிநிதி செல்வகுமார், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் கரியச்சேரி சேகர், அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் திருக்கழுக்குன்றம் கிழக்கு வட்டார தலைவர் நெய்குப்பி எம் ஏழுமலை, செங்கல்பட்டு வடக்கு மாவட்ட செயலாளர் பட்டிக்காடு பாபுநாயக்கர், விசிகட்சியின் பொறுப்பாளர், இ சி ஆர் அன்பு திருப்போரூர் சட்டமன்ற தொகுதி துணை செயலாளர் வேலுபிரபாகரன், பொறுப்பாளர்கள் வேதஎழில்மலை, மணமை சண்முகசுந்தரம் சமூக ஆர்வலர் சாய் சதீஷ் ஆகியோர் உடனிருந்தனர்.

முதற்கட்டமாக நெய்க்குப்பி ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 300 க்கும் மேற்பட்டவர்களுக்கு கோவிட் ஷில்டு தடுப்பு ஊசி செலுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Updated On: 29 May 2021 7:57 AM GMT

Related News

Latest News

  1. கோவை மாநகர்
    பாரதியார் பல்கலை., பகுதியில் நாய்கள் தாக்கி 3 மான்கள் உயிரிழப்பு
  2. கோவை மாநகர்
    கோவை ரயில் நிலையம் முன் குளம் போல் தேங்கிய சாக்கடை நீர் ; பயணிகள்
  3. கோவை மாநகர்
    கோவையில் போதை மாத்திரைகளை விற்பனை செய்த கும்பல் கைது
  4. உலகம்
    இப்போ பூமியில் எவ்ளோ தண்ணீர் இருக்கு தெரியுமா..?
  5. திருச்சிராப்பள்ளி மாநகர்
    மாணவர்கள் வாழ்நாள் முழுவதும் விளையாட திருச்சி மாவட்ட ஆட்சியர்...
  6. விவசாயம்
    குறுவை சாகுபடி துவக்கம்: 20 மணி நேரம் மின்சாரம் கேட்கும் விவசாயிகள்
  7. இந்தியா
    சீன எல்லைக்கு அருகே உலகின் மிக உயரமான டேங்க் பழுதுபார்க்கும் வசதியை...
  8. வானிலை
    தெற்காசியாவில் ஏப்ரல் வெப்ப அலை 45 மடங்கு அதிகமாகும்: விஞ்ஞானிகள்
  9. உலகம்
    வட அரைக்கோளத்தில் உச்சம் தொட்ட வெப்ப அலை..! அதிர்ச்சி ஆய்வு முடிவு..!
  10. ஆன்மீகம்
    துன்பங்களை எதிர்கொள்ளும் நம்பிக்கை தரும் ரமலான் தின வாழ்த்துகள்!