/* */

திருக்கழுக்குன்றம் பேரூராட்சி: திமுக வேட்பாளர்கள் இன்று வேட்பு மனு தாக்கல்

திருக்கழுக்குன்றம் பேரூராட்சிகான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் இன்று வேட்பு மனு தாக்கல் செய்தனர்.

HIGHLIGHTS

திருக்கழுக்குன்றம் பேரூராட்சி: திமுக வேட்பாளர்கள் இன்று வேட்பு மனு தாக்கல்
X

வேட்புமனு தாக்கல் செய்ய வந்திருந்த திமுக வேட்பாளர்கள்.

செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் பேரூராட்சி தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் தேர்தல் நடத்தும் அலுவலர் கலையரசனிடம் வேட்பு மனுவை தாக்கல் செய்தனர். நகர்ப்புற தேர்தல் வருகின்ற 19 ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தங்களது வேட்பாளர்களை அறிமுகம் செய்தனர். அதனடிப்படையில் காஞ்சி வடக்கு மாவட்ட திருக்கழுக்குன்றம் வடக்கு ஒன்றிய செயலாளர் தமிழ்மணி முன்னிலையில் திமுக வேட்பாளர்கள் தங்களது வேட்பு மனுவை தேர்தல் நடத்தும் அலுவலரிடம் வழங்கினர். அதில் திமுக பேரூர் செயலர் யுவராஜ், முன்னாள் கவுன்சிலர் சத்தியமூர்த்தி உட்பட 7 ஆண்கள், 7 பெண்கள் என 14 பேர் வேட்பு மனு தாக்கல் செய்தனர். இதில் மாவட்ட ஒன்றிய பேரூர், கிளை கழக நிர்வாகிகள் உடனிருந்தனர்.

Updated On: 3 Feb 2022 6:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வாழைத்தண்டுகளில் நிறைந்திருக்கும் மருத்துவ நன்மைகள் பற்றி தெரியுமா?
  2. லைஃப்ஸ்டைல்
    கணவன் மனைவி ஒற்றுமையை வலுப்படுத்த ஐந்து வழிகள் என்னென்ன தெரியுமா?
  3. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே கறி மசாலா பொடி தயாரிப்பது எப்படி?
  4. லைஃப்ஸ்டைல்
    சுவையான ரசப்பொடி, வீட்டிலேயே தயாரிப்பது எப்படி?
  5. லைஃப்ஸ்டைல்
    இரவில் தூக்கமின்றி தவிக்கிறீர்களா?
  6. அரசியல்
    காங்கிரஸுக்கு அவர்கள் ஆட்சியில் இருந்தால்தான் ஜனநாயகம்: பிரதமர்...
  7. லைஃப்ஸ்டைல்
    கவலையை விரட்ட நீங்க ரெடியா?
  8. கோவை மாநகர்
    பாரதியார் பல்கலை., பகுதியில் நாய்கள் தாக்கி 3 மான்கள் உயிரிழப்பு
  9. கோவை மாநகர்
    கோவை ரயில் நிலையம் முன் குளம் போல் தேங்கிய சாக்கடை நீர் ; பயணிகள்
  10. கோவை மாநகர்
    கோவையில் போதை மாத்திரைகளை விற்பனை செய்த கும்பல் கைது