/* */

திருக்கழுக்குன்றம் மலைக்கோவில் படியில் இடறி விழுந்து மாணவன் உயிரிழப்பு

திருக்கழுக்குன்றம் மலைக்கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய சென்ற மாணவன் படியில் கால் இடறி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார்

HIGHLIGHTS

திருக்கழுக்குன்றம் மலைக்கோவில் படியில் இடறி விழுந்து மாணவன் உயிரிழப்பு
X

மலைக்கோவிலில் படியில் இடறி விழுந்து உயிரிழந்த மாணவர் மணிகண்டன்

செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் கேட்டரிங் வேலை செய்ய வந்த காஞ்சிபுரம் மாவட்டம் உத்தரமேரூர் அடுத்த பெருநகர் சேத்துப்பட்டை சேர்ந்த விநாயகம் என்பவருடைய மகன் ஒன்பதாம் வகுப்பு பயின்று வரும் மணிகண்டன். இவர் பகுதிநேர வேலையாக கேட்டரிங் வேலை செய்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.

இதனையடுத்து திருக்கழுக்குன்றத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்திற்கு கேட்டரிங் வேலை செய்ய வந்தபோது பணியை முடித்து விட்டு, அருகிலுள்ள திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் மலைக்கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய நண்பர்களுடன் திரும்பிக் கொண்டிருந்தார்.

அப்போது மலைக்கோவிலில் படியில் இடறி விழுந்து தலையில் அடிபட்டு பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில் இன்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். உடலைக் கைப்பற்றி திருக்கழுக்குன்றம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Updated On: 11 Feb 2022 7:15 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    பாஜக-வின் பிளான் B என்ன?
  2. இந்தியா
    பாஜக - காங்கிரஸ் யாருக்கு வெற்றி? தரவுகள், கள நிலவரம் சொல்வது என்ன?
  3. தமிழ்நாடு
    இப்படி ஒரு ரயில் நிலையம் கேள்விப்பட்டிருக்கீங்களா..?
  4. இந்தியா
    ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதலில் பாஜ தலைவர் கொல்லப்பட்டார்..!
  5. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  6. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 761 கன அடியாக சரிவு..!
  7. திருத்தணி
    பள்ளிப்பட்டு அருகே அங்காள பரமேஸ்வரி ஆலய கும்பாபிஷேகம்
  8. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  9. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  10. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்