Begin typing your search above and press return to search.
மாமல்லபுரத்தை பார்வையிட்ட பாராளுமன்ற நிலைக்குழு உறுப்பினர்கள்
மாமல்லபுரத்தில் உள்ள புராதன சின்னங்களை, பாராளுமன்ற நிலைக்குழு உறுப்பினர்கள் பார்த்து ரசித்தனர்.
HIGHLIGHTS
டெல்லியில் இருந்து பாராளுமன்ற நிலைக்குழு உறுப்பினர்கள் 18 பேர், நேற்று மாலை 6 மணிக்கு மாமல்லபுரம் வந்தனர். பின்னர், நிலைக்குழு உறுப்பினர்கள், இங்குள்ள வெண்ணெய் உருண்டைபாறை, அர்ச்சுணன் தபசு, ஐந்து ரதம், கடற்கரை கோயில் உள்ளிட்ட புராதன சின்னங்களை பார்வையிட்டு, ஆய்வு செய்தனர்.
பின்னர், அனைவரும் வெண்ணெய் உருண்டை பாறை முன்பு நின்று குழு புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர். இங்குள்ள, மூத்த சுற்றுலா வழிகாட்டி ஒருவர், மாமல்லபுரத்தின் சிறப்பு குறித்து விளக்கிக் கூறினார். இதையடுத்து, வெண்ணெய் உருண்டை பாறைக்கு அரு வெளியே காரில் ஏற வந்த நிலைக் குழுவினர், அங்கு பாசிமணி விற்றுக் கொண்டிருந்த நரிக்குறவ பெண்ணை அழைத்து ஆர்வமுடன் பாசிமணி வாங்கி சென்றனர்.