/* */

சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை

கடன் தொல்லையால், சிறப்பு உதவி ஆய்வாளர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

HIGHLIGHTS

சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை
X

தற்கொலை செய்து கொண்ட கௌதம்.

செங்கல்பட்டு மாவட்டம் மேலகோட்டையூர் காவலர் குடியிருப்பு உள்ளது. இங்கு சுமார் ஐயாயிரத்துக்கும் மேற்பட்ட காவலர்கள் குடியிருந்து வருகின்றனர். இங்கு வசித்து வந்தவர், சென்னை ஆயுதப்படை சிறப்பு பிரிவு ஆய்வாளர் கௌதம். இவர் கடந்த சில நாட்களாக மனவருத்தத்தில் இருந்துள்ளார். மேலும், அவருக்கு கடன் தொல்லை அதிகமாக உள்ளதாக கூறப்படுகிறது

இதன் காரணமாக, குடும்பத்தில் அடிக்கடி பிரச்சினைகள் ஏற்பட்டது. மிகுந்த மனவருத்தத்தில் இருந்த அவர், இன்று காலையில், தான் வைத்திருந்த துப்பாக்கியால், படுக்கை அறையில் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது உடலை கைப்பற்றி, தாழம்பூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதில், குடும்ப பிரச்சனை காரணமாக தற்கொலை செய்து கொண்டதாக, முதல்கட்ட வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 59 வயதான கௌதமன் உடல், உடற்கூறு ஆய்வுக்காக உடலை கைப்பற்றிய போலீசார் செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி விசாரித்து வருகின்றனர்.

Updated On: 5 Oct 2021 6:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அருமையான தோழமைக்கு அன்பான பிறந்தநாள் வாழ்த்து
  2. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சியில் தினமும் பெய்யும் மழையால் மாயமானது அக்னி நட்சத்திர வெயில்
  3. கல்வி
    தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலையத்தில் பட்ட மற்றும் பட்டய படிப்புகள்
  4. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியத்தில் மந்திரி மாதிரி வாழணுமா? அடிக்கடி முந்திரி
  5. லைஃப்ஸ்டைல்
    தனக்கென வாழாமல் நமக்கென வாழும் தந்தைக்கு பிறந்தநாள் வாழ்த்து
  6. தமிழ்நாடு
    மணிக்கு 200 கி. மீ.வேகம்: பறக்கும் டாக்சி தயாரிக்கும் முயற்சியில்...
  7. லைஃப்ஸ்டைல்
    ருசியான சில்லி பரோட்டா செய்வது எப்படி?
  8. லைஃப்ஸ்டைல்
    குழம்பு மிளகாய் பொடி வீட்டிலேயே தயார் செய்வது எப்படி?
  9. திருச்சிராப்பள்ளி மாநகர்
    கை நழுவி போகிறதா? திருச்சி பஞ்சப்பூரில் அமைய உள்ள ஒலிம்பிக் அகாடமி
  10. ஆன்மீகம்
    தியாகத் திருநாளாம் பக்ரீத் வாழ்த்து சொல்லலாம் வாங்க