/* */

கொரோனா விழிப்புணர்வு மராத்தான்; 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

திருமாவளவன் பிறந்த நாளை முன்னிட்டு நடத்தப்பட்ட மராத்தான் போட்டியில் 500க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

HIGHLIGHTS

கொரோனா விழிப்புணர்வு மராத்தான்; 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு
X

கேளம்பாக்கத்தில் நடந்த கொரோனா விழிப்புணர்வு மராத்தான்.

செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் ஒன்றியத்துக்குட்பட்ட கேளம்பாக்கம் காமராஜர் சாலையில், விசிக தலைவர் தொல்.திருமாவளவன் பிறந்தநாளை முன்னிட்டு கொரோனா விழிப்புணர்வு மராத்தான் போட்டிகள் நடைபெற்றது.

இந்த போட்டியானது கேளம்பாக்கம் காமராஜர் சிலையில் துவங்கி திருப்போரூர் அம்பேத்கர் சிலை அருகில் முடிவு பெற்றது. இந்த போட்டியினை திருப்போரூர் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.எஸ்.பாலாஜி கொடியசைத்து துவக்கி வைத்தார்.

தமிழகத்தில் உள்ள 15க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் இருந்து சுமார் 500க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர். போட்டியில் கலந்து கொண்டு முதல் 5 இடத்தை பிடித்த வீரர்களுக்கு சன்மானமும் போட்டியில் கலந்துகொண்ட அனைவருக்கும் ஊக்கமளிக்கும் வகையில் சான்றிதழ்களும் வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் விடுதலை சிறுத்தை கட்சியின் மாநில செயலாளர் விடுதலை செழியன், செங்கல்பட்டு வடக்கு மாவட்ட செயலாளர் ராஜ்குமார், திருப்போரூர் வடக்கு ஒன்றிய செயலாளர் விடுதலை நெஞ்சம், திருப்போரூர் தெற்கு ஒன்றிய செயலாளர் செல்வகுமார் மற்றும் கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Updated On: 17 Aug 2021 8:30 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வாரிக்கொடுக்கும் வாட்ஸ்ஆப் மொழிகள்..! தேடி படீங்க..!
  2. லைஃப்ஸ்டைல்
    சீற்றத்தை அடக்கி ஆளும் சீறாப்புதல்வன், 'மௌனம்'..!
  3. கும்மிடிப்பூண்டி
    தலைமை ஆசிரியர் பணி நிறைவு பாராட்டு விழா!
  4. லைஃப்ஸ்டைல்
    அடிப்படை தேவைகளுக்கு அப்பால்: நடுத்தர வர்க்கத்தின் கனவுகளும்...
  5. வீடியோ
    Savukku Shankar வழக்கில் அதிரடி திருப்பம் | நீதிமன்றம் அதிரடி உத்தரவு...
  6. லைஃப்ஸ்டைல்
    அமைதி உங்களுக்குள்தான் இருக்கிறது..? வெளியில் ஏன் தேடுகிறீர்கள்..?
  7. லைஃப்ஸ்டைல்
    நம்பிக்கை ஊட்டும் மேற்கோள்கள்: வாழ்க்கையை வெற்றிபெறும் திறவுகோல்!
  8. கவுண்டம்பாளையம்
    கோவை விமான நிலையத்தில் 1.220 கிலோ தங்ககட்டிகள் பறிமுதல்
  9. மேட்டுப்பாளையம்
    கோவையில் சட்டவிரோதமாக தங்கி பணிபுரிந்து வந்த இரு வங்கதேச இளைஞர்கள்...
  10. திருத்தணி
    சாமி தரிசனம் செய்ய வந்த பக்தர் மாரடைப்பால் உயிரிழப்பு!