/* */

மாசி மகம்: மாமல்லபுரம் கன்னியம்மனுக்கு பூஜை நடத்திய இருளர் இன மக்கள்

மாசி மகத்தை முன்னிட்டு, மாமல்லபுரத்தில் கன்னியம்மனுக்கு இருளர் இன மக்கள் பூஜை நடத்தி வழிபட்டனர்.

HIGHLIGHTS

மாசி மகம்: மாமல்லபுரம் கன்னியம்மனுக்கு பூஜை நடத்திய இருளர் இன மக்கள்
X

சிறப்பு பூஜையில் கலந்து கொண்ட இருளர் இன மக்கள். 

செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் கடற்கரையில், இருளர் சமூகத்தினர், மாசி மாத பௌர்ணமி நாளில் குடும்பத்துடன் ஒன்று கூடுவது வழக்கம். மூன்று நாட்கள் நடைபெறும் இவ்விழாவில், மாமல்லபுரம் கடற்கரையில் ஆங்காங்கே புடவைகள் மற்றும் தென்னங்கீற்றுகள் ஆகியவற்றை கொண்டு திறந்தவெளியில் குடில்கள் அமைத்து கன்னியம்மனை வழிபட்ட அவர்கள், நேர்த்திக்கடனும் செலுத்தினர்.

திருமணம், நிச்சயதார்த்தம், மொட்டையடித்து காது குத்தும் நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. மேலும் இருளர் மக்களின் பாரம்பரிய பாடல்களை பாடியபடியும் நடனமாடினர். இதில் செங்கல்பட்டு, திருவள்ளூர், புதுவை, சென்னை உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான இருளர் இன மக்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர்.

Updated On: 16 Feb 2022 9:30 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  2. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் தூய்மை பணியில் ஈடுபட்ட அமைச்சர்
  3. செய்யாறு
    செய்யாறு அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கு...
  4. திருவண்ணாமலை
    கார் விபத்தில் சிக்கிய அமைச்சரின் மகன்: போலீசார் விசாரணை
  5. நாமக்கல்
    நாமக்கல்லில் இன்னுயிர் காப்போம் திட்டம்: 6,568 பேருக்கு ரூ. 4.73 கோடி...
  6. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  7. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் இயற்கை உணவு திருவிழா
  8. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே வலி நிவாரணி எண்ணெய் தயாரிப்பது எப்படி?
  9. லைஃப்ஸ்டைல்
    வெறும் வயிற்றில் கற்றாழை சாறு அருந்துவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி...
  10. ஆன்மீகம்
    பழனியில் வரும் ஆகஸ்ட் மாதத்தில், உலக முருக பக்தர்கள் மாநாடு