/* */

மாமல்லபுரம் கடற்கரை மக்கள் கூட்டம் இன்றி வெறிச்சோடியது

சுற்றுலா தலங்களுக்கு அரசு அனுமதி அளித்தும் மாமல்லபுரம் கடற்கரை மக்கள் கூட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டது.

HIGHLIGHTS

மாமல்லபுரம் கடற்கரை மக்கள் கூட்டம் இன்றி   வெறிச்சோடியது
X

வெறிச்சோடிய மாமல்லபுரம் கடற்கரை

செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் கடற்கரைகளில் பொதுமக்கள் செல்ல அனுமதி அளித்ததை அடுத்து, இன்று காலைமுதல் சுற்றுலா பயணிகள் குறைந்த அளவிலேயே வந்தனர்.

தமிழகத்தில் பல தளர்வுகளை அறிவித்து செப்டம்பர் 6ம் தேதி காலை 6 மணி வரை ஊரடங்கை நீட்டித்து முதலமைச்சர் முக ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

இந்த தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கில் பல்வேறு புதிய தளர்வுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது. அதில் குறிப்பாக நீண்ட மாதங்களாக கடற்கரையில் பொதுமக்களுக்கு அனுமதி இல்லாத நிலையில், தற்போது இன்று முதல் அதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.


அதன் ஒரு பகுதியாக முக்கிய சுற்றுலா தலமான மாமல்லபுரம் கடற்கரையில் இன்று சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து காணப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் இன்று திங்கட்கிழமை என்பதால் மாமல்லபுரத்தில் சுற்றுலா பயணிகள் வருகை குறைந்த அளவிலான மக்களே வந்திருந்தனர்.

இதனால் மாமல்லபுரத்தில் உள்ள கடைகளின் பணியாளர்கள், சிறு வியாபாரிகள் கவலையடைந்தனர்.

Updated On: 23 Aug 2021 7:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை புத்தகத்தின் புதிய அத்தியாயம், திருமணம்..! வாழ்த்துவோமா..?
  2. விளையாட்டு
    மும்பை இந்தியன்ஸ் ஆட்டம் குறித்து ரோஹித் ஷர்மாவின் முதல் எதிர்வினை
  3. சோழவந்தான்
    சோழவந்தான் திரௌபதி அம்மன் கோவிலில் கீசகன் வதம்
  4. லைஃப்ஸ்டைல்
    அரிதாய் கிடைத்த மனித பிறப்பை மகிழ்ந்து கொண்டாடுவோம் வாங்க..!
  5. லைஃப்ஸ்டைல்
    வீட்டின் தூண்களாய், உலகின் ஒளியாய் விளங்கும் மகளிர் தினச் சிறப்பு...
  6. காஞ்சிபுரம்
    தொடங்கியது வரதராஜ பெருமாள் திருக்கோயில் பிரம்மோற்சவம்
  7. லைஃப்ஸ்டைல்
    சிரிப்பும் சந்தோஷமும் நிறைந்த தமிழ் திருமண வாழ்த்துகள்!
  8. காஞ்சிபுரம்
    ஆதிசங்கரரின் உபதேசங்களை மொழிபெயர்க்க வேண்டும்..!
  9. லைஃப்ஸ்டைல்
    பெண்மை சக்தியைப் போற்றும் உலக மகளிர் தின வாழ்த்துக்கள்
  10. லைஃப்ஸ்டைல்
    பெண்மையை போற்றுவோம்..! வல்லமை வளரும்..!