/* */

கள்ளக்குறிச்சி மாணவிக்கு நீதி கேட்டு சட்டக்கல்லூரி மாணவர்கள் சாலை மறியல்

கள்ளக்குறிச்சி மாணவிக்கு நீதி கேட்டு சட்டக்கல்லூரி மாணவர்கள் வண்டலூர் அருகே சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

HIGHLIGHTS

கள்ளக்குறிச்சி மாணவிக்கு நீதி கேட்டு சட்டக்கல்லூரி மாணவர்கள் சாலை மறியல்
X

வண்டலூர் அருகே சட்டக்கல்லூரி மாணவர்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.

செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூர் கேளம்பாக்கம் சாலை, புதுபாக்கத்தில் சென்னை டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக்கல்லூரி மாணவர்கள் சுமார் 50 க்கும் மேற்பட்டோர் கள்ளக்குறிச்சி மாணவி மர்ம மரணத்திற்கு நீதி கேட்டும், பள்ளியின் உரிமத்தை ரத்து செய்ய வலியுறுத்தியும் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் வண்டலூர் கேளம்பாக்கம் சாலையில் ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
போராட்டத்தில் ஈடுபட்ட சட்டக்கல்லூரி மாணவர்கள் நீதி வேண்டும், நீதி வேண்டும், சிதைக்காதே, சிதைக்காதே மாணவிகளின் வாழ்க்கையை சிதைக்காதே, தண்டனை கொடு, தண்டனை கொடு மாணவியை படுகொலை செய்த கயவர்களுக்கு தண்டனை கொடு, பள்ளியின் உரிமத்தை ரத்து செய் என கோஷங்களை எழுப்பினர்.
தகவலறிந்து வந்த கேளம்பாக்கம் போலீசார் மாண்வர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். சட்டக்கல்லூரி பேராசிரியர்கள் மாணவர்களிடம் பேசி போரட்டத்தை கைவிட வைத்தனர்.

Updated On: 21 July 2022 10:59 AM GMT

Related News

Latest News

  1. ஆரணி
    தோல்வி பயத்தில் பாஜகவினர்: செல்வப் பெருந்தகை பேட்டி
  2. வீடியோ
    குலதெய்வம் ஒரு குடும்ப உறுப்பினர் இயக்குநர் Perarasu உருக்கம்...
  3. தமிழ்நாடு
    தமிழகத்தில் தேனி, விருதுநகர், தென்காசி மாவட்டங்களுக்கு கனமழை...
  4. இந்தியா
    தொலை தொடர்புத் துறை பெயரில் போலி அழைப்புகள்: மத்திய அரசு எச்சரிக்கை
  5. லைஃப்ஸ்டைல்
    அன்னைக்கு இன்னைக்கு பிறந்தநாள்..! வாழ்த்துகிறோம்..!
  6. லைஃப்ஸ்டைல்
    வார்த்தைகளால் பூ தொடுத்து அக்காவுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  7. இந்தியா
    உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த நான்கு மாத குழந்தை!
  8. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி கோர்ட்டில் ஆஜர்: சவுக்கு சங்கர் லால்குடி கிளை சிறையில்...
  9. லைஃப்ஸ்டைல்
    வீட்டில் இருந்தபடியே பெண்கள் சம்பாதிப்பது எப்படி?
  10. ஆன்மீகம்
    நடப்பாண்டில் வைகாசி விசாகம் எப்போது வருகிறது தெரியுமா?