பாமக திருப்போரூர் தொகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பு

X
By - A.Mahendran, Reporter |1 April 2021 8:48 AM IST
பாட்டாளி மக்கள் கட்சியினர் வீதி வீதியாக சென்று வாக்கு சேகரிப்பு.
தமிழகம் முழுவதும் தற்போது தீவிரமாக வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் தொகுதியில் பாமகவைச் சேர்ந்த மாநில துணை பொதுச் செயலாளரும் தற்போதைய திருப்போரூர் சட்டமன்ற வேட்பாளருமான திருக்கச்சூர் ஆறுமுகம் போட்டியிடுகிறார்.
இந்நிலையில் செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் தொகுதியில் வீதி வீதியாகச் சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இதையடுத்து பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் தையூர், ஊராட்சி பகுதியில் வாக்காளர்களை சந்தித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். இதில் கூட்டணி கட்சிகளைச் சேர்ந்த ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
Next Story
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu