/* */

குடிபோதையில் மனைவியை அடித்து கொன்ற கணவன் கைது: போலீஸ் விசாரணை

மாமல்லபுரம் அருகே பையனூர் கிராமத்தில் குடிபோதையில் மனைவியை அடித்து கொன்றவர் கைது.

HIGHLIGHTS

குடிபோதையில் மனைவியை அடித்து கொன்ற கணவன் கைது: போலீஸ் விசாரணை
X

செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் அடுத்த பையனூர் கிராமத்தில் வசிப்பவர் ரவிக்குமார் (38). இவர் இதே பகுதியில் கூலி வேலை செய்து வருகிறார்.

இவருடைய மனைவி ஆனந்தி வயது 33, இவர்களுக்கு ஒரு மகள், ஒரு மகன் என இரு சிறுவர்கள் உள்ளனர். கூலி வேலை செய்து வரும் ரவிக்குமார் தினமும் குடித்து விட்டு வீட்டில் சண்டை போடுவது வழக்கமாக கொண்டுள்ளார். அதே போல் நேற்றைய தினம் இரவு மது போதையில் வீட்டிற்கு வந்து உள்ளார். தினமும் குடித்துவிட்டு வருகிறாயே என மனைவி கண்டித்ததாக தெரிகிறது.

கோபமடைந்த ரவிக்குமார் உடற்பயிற்சி செய்யும் தம்பில்ஸ்-ஐ எடுத்து மனைவியை தலையிலேயே அடித்ததில் ஆனந்தி சம்பவ இடத்திலேயே பலியானார்.

இதைத்தொடர்ந்து மாமல்லபுரம் காவல் துணை கண்காணிப்பாளர் குணசேகர் தலைமையில் போலீசார் பிரேதத்தை கைப்பற்றி செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்து ரவிக்குமாரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Updated On: 8 Aug 2021 4:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அடிக்கடி முகத்தில் சவரம் செய்தால் முடி அடர்த்தியாக வளருமா?
  2. உலகம்
    உலகில் அதிக எண்ணிக்கையில் இந்தியர்கள் வசிக்கும் நாடுகள் குறித்து...
  3. லைஃப்ஸ்டைல்
    ராகி தோசை மற்றும் தேங்காய் சட்னி செய்வது எப்படி?
  4. லைஃப்ஸ்டைல்
    கருவுற்ற தாய்மார்களுக்கு ஏற்படும் தைராய்டு பிரச்னைகளை தடுப்பது...
  5. மேட்டுப்பாளையம்
    மேட்டுப்பாளையத்தில் 1.15 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  6. தொழில்நுட்பம்
    ஏலியன் நாகரிக அறிகுறிகளைக் காட்டும் 7 நட்சத்திரங்களை கண்டறிந்த...
  7. லைஃப்ஸ்டைல்
    வண்ண வண்ணமாக அரிசி..! எது ஆரோக்யம்..?
  8. கோவை மாநகர்
    சட்டமன்றத் தேர்தல் கூட்டணியை காங்கிரஸ் தலைமை தான் முடிவு செய்யும் :...
  9. லைஃப்ஸ்டைல்
    வயிற்றுப்போக்கை கட்டுப்படுத்தும் சத்தான பானங்கள் பற்றித் தெரியுமா?
  10. லைஃப்ஸ்டைல்
    குளிர்சாதன பெட்டியில்(Fridge) வைக்கக்கூடாத பழங்கள்..!