/* */

செங்கல்பட்டு திருப்போரூர்: தடை செய்யப்பட்ட பகுதிகளை கோட்டாட்சியர் ஆய்வு

செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூரில் தடை செய்யப்பட்ட பகுதியை கோட்டாட்சியர் ஆய்வு செய்தார்.

HIGHLIGHTS

செங்கல்பட்டு திருப்போரூர்: தடை செய்யப்பட்ட பகுதிகளை கோட்டாட்சியர் ஆய்வு
X

 திருப்போரூரில் தடை செய்யப்பட்ட பகுதியை கோட்டாட்சியர் ஆய்வு செய்தார்.

செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் தொற்று பரவல் அதிகரித்து வருகிறது, இந்தநிலையில் திருப்போரூர் பேரூராட்சியில் அடங்கிய கச்சேரி சந்து தெருவில் 7 பேருக்கு தொற்று உறுதியானதை தொடர்ந்து, தற்போது அந்த பகுதி தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

அங்குள்ள குடியிருப்புவாசிகள் வெளியேறவும், வெளியில் இருந்து வருபவர்கள் அங்கு செல்லவும் தடை விதிக்கப்பட்டு உள்ளது. இந்த தடை செய்யப்பட்ட பகுதியில் உள்ளவர்களுக்கு தேவையான, மருத்துவம் மற்றும் அத்தியாவசிய தேவைகளை செய்து தருவதாக பேரூராட்சி நிர்வாகம் தெரிவித்து உள்ளது. இந்நிலையில் செங்கல்பட்டு கோட்டாட்சியர் சுரேஷ் தடை செய்யப்பட்ட பகுதியை ஆய்வு மேற்கொண்டார்.

அவர்களுக்கு மருத்து தேவைகள், அத்தியாவசிய பொருட்கள் தேவைகள் செய்துதரப்படுகிறதா என கேட்டறிந்தார். இந்த ஆய்வின் போது, திருப்போரூர் தாசில்தார் ரஞ்சினி,பேரூராட்சி செயல் அலுவலர் சதீஷ்குமார், இளநிலை உதவியாளர் சித்ரா, சுகாதார மேற்பார்வையாளர் ரவிச்சந்திரன் உடனிருந்தனர்.

Updated On: 27 May 2021 11:03 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சிவனை தஞ்சமடைந்தால் வாழ்க்கை ஒளிபெறும்..!
  2. லைஃப்ஸ்டைல்
    சிலருக்கு வரம்; பலருக்கு சாபமாகும் தனிமை..!
  3. குமாரபாளையம்
    குமாரபாளைத்தில் மழை வேண்டி சிறப்பு யாகம்!
  4. லைஃப்ஸ்டைல்
    உழைப்பில் எறும்பை போல இரு..! உயர்வு தேடி வரும்..!
  5. கோவை மாநகர்
    காவசாகி என்ற அரிய வகை நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை காப்பாற்றிய அரசு...
  6. லைஃப்ஸ்டைல்
    உலக இயக்கம்கூட உன்னால்தான், பெண்ணே..!
  7. திருப்பரங்குன்றம்
    மதுரை விமான நிலையத்தில், பல லட்சம் பெறுமான தங்கம் மீட்பு
  8. திருமங்கலம்
    மதுரை மாவட்டத்தில், பலத்த மழை: சாலைகளில் மழைநீர்!
  9. குமாரபாளையம்
    10ம் வகுப்பு பொதுத் தேர்வில் அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் பள்ளி மாணவ,...
  10. ஈரோடு
    ஈரோடு மாநகரில் உணவு பாதுகாப்புத் துறையினர் சோதனை: 23 கிலோ அழுகிய...