/* */

திருப்போரூர் அருகே 35 லிட்டர்  கள்ளச்சாராயம் பறிமுதல்; 2 பேர் கைது!

திருப்போரூர் அருகே மானாமதியில் 53 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள, 35 லிட்டர் கள்ளச்சாராயம் பறிமுதல், 2 பேர் கைது, ஒருவர் தலைமறைவு,

HIGHLIGHTS

திருப்போரூர் அருகே 35 லிட்டர்  கள்ளச்சாராயம் பறிமுதல்; 2 பேர் கைது!
X

கள்ளச்சாராயம் காய்ச்சியதாக கைதானவர்களை காணலாம்.

செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் அடுத்த மானாமதி ஏரிக்கரை பகுதியில் சட்டவிரோதமாக கள்ளச்சாராய விற்பனை நடைபெற்று வருவதாக மானாமதி போலீசாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது, தகவலின் பேரில் திருப்போரூர் ஆய்வாளர் கலைச்செல்வி, மற்றும் உதவி ஆய்வாளர் சந்திரசேகர், மானாமதி உதவி ஆய்வாளர் பன்னீர்செல்வம் ஆகியோர் ஏரிக்கரை பகுதியில் சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது, போலீசாரை பார்த்ததும் கள்ளச்சாராயம் விற்பனையில் ஈடுபட்டிருந்த 3 பேர் தப்பியோடினர். அதில் இருவரை பிடித்து விசாரணை செய்ததில், மானாமதியை சேர்ந்த சுதா (43), கமலக்கண்ணன் (33) என தெரிந்தது. அவர்களிடமிருந்த, 53 ஆயிரம் மதிப்புள்ள, 35 லிட்டர் சாராயம் பறிமுதல் செய்தனர்.

இருவரை கைது செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பின்பு சுதாவை புழல் சிறையிலும், கமலக்கண்ணனை செங்கல்பட்டு சிறையிலும் அடைத்தனர். மேலும் தலைமுறைவாக உள்ள ஏழுமலையை போலீசார் தேடி வருகின்றனர்.

Updated On: 28 May 2021 9:14 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    பாலாடைக்கட்டி (சீஸ்) தினமும் சாப்பிடலாமா?
  2. லைஃப்ஸ்டைல்
    காரசாரமான பூண்டு மிளகாய் சட்னி செய்வது எப்படி?
  3. லைஃப்ஸ்டைல்
    சுவையான ஐஸ்கிரீம் வீட்டிலேயே செய்வது எப்படி?
  4. லைஃப்ஸ்டைல்
    சிவனை தஞ்சமடைந்தால் வாழ்க்கை ஒளிபெறும்..!
  5. லைஃப்ஸ்டைல்
    சிலருக்கு வரம்; பலருக்கு சாபமாகும் தனிமை..!
  6. குமாரபாளையம்
    குமாரபாளைத்தில் மழை வேண்டி சிறப்பு யாகம்!
  7. லைஃப்ஸ்டைல்
    உழைப்பில் எறும்பை போல இரு..! உயர்வு தேடி வரும்..!
  8. கோவை மாநகர்
    காவசாகி என்ற அரிய வகை நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை காப்பாற்றிய அரசு...
  9. லைஃப்ஸ்டைல்
    உலக இயக்கம்கூட உன்னால்தான், பெண்ணே..!
  10. திருப்பரங்குன்றம்
    மதுரை விமான நிலையத்தில், பல லட்சம் பெறுமான தங்கம் மீட்பு