/* */

திருப்போரூர் அருகே கார் சாலை தடுப்பில் மோதி விபத்து

பாண்டிச்சேரிக்கு சென்று வந்த கார், திருப்போரூர் அருகே சாலை தடுப்பில் மோதி விபத்து: 4 பேர் படுகாயம்

HIGHLIGHTS

திருப்போரூர் அருகே கார் சாலை தடுப்பில் மோதி விபத்து
X

திருப்போரூர் அருகே கார் சாலை தடுப்பில் மோதி விபத்து 

பாண்டிச்சேரியிலிருந்து சென்னை நோக்கி 4 பேருடன் சென்று கொண்டிருந்த கார், இன்று காலை செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கம் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து நிலை தடுமாறி சாலையில் உள்ள தடுப்பில் மோதி விபத்துக்குள்ளானது. அதனால் காரின் முன்பகுதி முழுவதும் உடைந்து கார் ஓட்டுனர் உள்பட காரில் பயணம் செய்தவர்களுக்கு பலத்த காயம் ஏற்பட்டது.

பலத்த காயமடந்த நான்கு பேரையும் அங்கிருந்தவர்கள் மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்து காரணமாக ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மேலும் கேளம்பாக்கம் போக்குவரத்து காவல் போலீசார் மேற்கொண்ட விசாரணையில் பாண்டிச்சேரியில் நேற்று முதல் மதுபான கடைகளை திறந்துள்ளதால் நான்கு பேரும் மதுகுடிக்கச் சென்றுவிட்டு சென்னைக்கு திரும்பும்போது விபத்து ஏற்பட்டதாகவும் முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இது குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

Updated On: 9 Jun 2021 3:09 AM GMT

Related News

Latest News

  1. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  2. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  3. கோவை மாநகர்
    கோவை நகரில் நள்ளிரவு பெய்த மிதமான மழை: மின்னல் தாக்கி தீப்பிடித்த...
  4. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  5. செய்யாறு
    செய்யாறு கல்வி மாவட்டத்தில் 89.25 சதவீத மாணவர்கள் தேர்ச்சி
  6. திருவண்ணாமலை
    மாதந்தோறும் ஊதியம் வழங்க கோரி தூய்மை பணியாளர்கள் கலெக்டரிடம் மனு
  7. வீடியோ
    🔴LIVE : டெல்லியில் Kejirwalai-யை கிழித்து தொங்கவிட்ட Annamalai...
  8. செங்கம்
    திருவண்ணாமலை மாவட்டத்தில் பனை ஓலை பாடி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள்...
  9. நாமக்கல்
    பாக்கு மரத்தில் கோடையில் பூச்சி நோய் கட்டுப்பாடு: 9ம் தேதி இலவச...
  10. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை: பகவான் ரமண மகரிஷி ஆராதனை விழா