/* */

வண்டலூர் பூங்காவிலிருந்து சிறுத்தை தப்பவில்லை

வண்டலூர் பூங்காவிலிருந்து சிறுத்தை தப்பியதாக சமூக ஊடகங்களில் வெளியான தகவல் தவறானது என பூங்கா நிர்வாகம் தெரிவித்துள்ளது.

HIGHLIGHTS

வண்டலூர் பூங்காவிலிருந்து சிறுத்தை தப்பவில்லை
X

செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூரில் உள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவிலிருந்து சிறுத்தை ஒன்று தப்பியுள்ளதாக சமூக வளைதளங்களில் பரவுவது முற்றிலும் தவறானது. இதனை யாரும் நம்பவேண்டாம் என பபூங்கா நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:

இன்று சில வலைத்தளங்களிலும்‌ மற்றும்‌ சமூக ஊடகங்களிலும் வெளியான இணைய வழி செய்தியில்‌, வண்டலூர்‌ உயிரியல்‌ பூங்காவில் இருந்து சிறுத்தை ஒன்று தப்பித்ததாக வெளியான செய்தி முற்றிலும் தவறானது.

அறிஞர்‌ அண்ணா உயிரியல்‌ பூங்காவில்‌ ஏழு சிறுத்தைகள்‌ உள்ளன. இதில்‌ 4 ஆண்‌ சிறுத்தைகளும்‌ 3 பெண்‌ சிறுத்தைகளும்‌ உள்ளன. அனைத்‌த்து சிறுத்தைகளும்‌ அந்தந்த விலங்குகளின்‌ இருப்பிடத்தில்‌ வனசரகரின் முறையான பராமரிப்பின்‌ கீழ்‌ முழுமையான சி.சி.டி.வி கண்காணிப்பில் பாதுகாப்பாக உள்ளன.

தவறான செய்திகளைப்‌ வெளியிடுவது மிகவும்‌ கண்டிக்கத்தக்க ததவறான செய்திகளை அகற்றி, தெளிவுபடுத்தும்‌ செய்திகளை வழங்‌கி சம்பந்தப்பட்ட செய்தி ஊடகங்கள்‌ நடவடிக்கை எடுக்க வேண்டும்‌. தவறான தகவல்களை கொடுப்போர்மீது துறைரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என வண்டலூர் பூங்கா நிர்வாக இயக்குநரகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Updated On: 6 May 2021 2:15 AM GMT

Related News

Latest News

  1. மதுரை மாநகர்
    மதுரை மாட்டுத்தாவணி காய் கனி வியாபாரிகள் பொதுக் குழுக் கூட்டம்..!
  2. லைஃப்ஸ்டைல்
    நிம்மதி நிம்மதி உங்கள் சாய்ஸ்!
  3. திருப்பரங்குன்றம்
    மதுரை அருகே பூட்டிக் கிடந்த மரக் கடையில் தீ விபத்து
  4. சோழவந்தான்
    வாடிப்பட்டி அருகே வைகாசி விசாக திருவிழா..!
  5. லைஃப்ஸ்டைல்
    மணவறையில் தொடங்குவது அல்ல; மன அறையில் தொடங்குவதே காதல்
  6. தொழில்நுட்பம்
    AI-ன் வளர்ச்சி தேடுபொறிகளை காணாமல் ஆக்குமா..? பிச்சை என்ன சொல்கிறார்?
  7. லைஃப்ஸ்டைல்
    வாரிக்கொடுக்கும் வாட்ஸ்ஆப் மொழிகள்..! தேடி படீங்க..!
  8. வீடியோ
    😎SalmanKhan-உடன் இணையும் AR Murugadoss !சம்பவம் Loading🔥!#salmankhan...
  9. லைஃப்ஸ்டைல்
    சீற்றத்தை அடக்கி ஆளும் சீறாப்புதல்வன், 'மௌனம்'..!
  10. கும்மிடிப்பூண்டி
    தலைமை ஆசிரியர் பணி நிறைவு பாராட்டு விழா!