/* */

தாம்பரம்: 2 மருந்தகங்களில் தொடர் கொள்ளை: உயிர்காக்கும் மருந்துகளை தேடினார்களா?

தாம்பரம் அருகே தொடர்ச்சியாக 2 மருந்தகங்களில் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட மருந்துகளையும் தேடியுள்ளதால் போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

HIGHLIGHTS

செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரத்தை அடுத்த செம்பாக்கம் காமராஜபுரத்தில் பாபு என்பவா் மெடிக்கல் ஷாப் நடத்தி வருகிறாா். இவா் நேற்று இரவு வழக்கம்போல் மெடிக்கல் ஷாப்பை மூடிவிட்டு வீட்டிற்கு சென்றுவிட்டாா். இன்று காலை வந்து பார்த்த போது கடை பூட்டு உடைக்கபட்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

உள்ளே சென்று பார்த்த போது கல்லாவில் வைக்கபட்டிதருந்த ரூ.65,000 ரொக்க பணம் திருடு போனது தெரிய வந்துள்ளது.அதோடு மருந்துகள், மாத்திரைகள் அனைத்தும் கலைக்கப்பட்டு சிதறி கிடந்தன. இதனால் திருடா்கள் எதோ குறிப்பிட்ட மருந்தை தேடியுள்ளனா் என்று தெரியவந்துள்ளது.

அதே போல் அருகில் உள்ள ராமநாதன் என்பவருக்கு சொந்தமான மெடிக்கல் ஷாப் பூட்டுகள் உடைக்கப்பட்டிருந்தன. அவா் வந்து பாா்த்தபோது, கல்லாவில் வைக்கபட்டிருந்த ரூ.20,000 ரொக்க பணத்தையும் திருடி சென்றுள்ளனர். இந்த மெடிக்கல் ஷாப்பிலும் அதைப்போல் மாத்திரை, மருந்துகள் சிதறிக்கிடந்தன.

இது குறித்து சேலையூர் போலீசாருக்கு தகவல் அளிக்கபட்டது. சம்பவ இடத்திற்கு கைரேகை நிபுணர்களுடன் வந்த போலீசார், தடையங்களை சேகரித்தனர். போலீசார் சி.சி.டி.வி பதிவுகளை ஆய்வு செய்தனர். அதில் இரண்டு மர்ம நபர்கள் இருசக்கர வாகனத்தில் தப்பி செல்லும் காட்சி பதிவாகி இருந்தது. போலீசார் வழக்குப் பதிவு செய்து, சிசிடிவி காட்சிகளை வைத்து மர்ம நபர்காளை தேடி வருகின்றனர்.

இந்த திருடா்கள் குறிப்பாக மெடிக்கல் ஷாப்களை மட்டுமே குறிவைத்து திருடியுள்ளனா். அதோடு கல்லாப்பெட்டியில் உள்ள பணத்தை மட்டும் எடுக்காமல், மருந்து, மாத்திரைகளையும் கலைத்துப்போட்டு எதோ மருந்து, மாத்திரைகளை தேடியுள்ளதுபோல் தெரிகிறது. எனவே கொரோனா வைரஸ் சிகிச்சைக்கு பயன்படுத்தும் உயிா்காக்கும் உயா் ரகம் போன்ற மருந்துகளை தேடிவந்துள்ள மா்ம ஆசாமிகளா? அல்லது தீவிரவாதி யாருக்காவது காயம் ஏற்பட்டு அதற்கு தேவையான மருந்து, மாத்திரிரைகளை தேடியுள்ளனரா? என்று போலீசாா் பல கோணங்களில் விசாரித்து வருகின்றனர்.

Updated On: 5 Jun 2021 11:56 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  2. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  3. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  4. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  5. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  6. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  7. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  8. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்
  9. ஈரோடு
    ஈரோட்டில் இன்று (மே.5) 5வது நாளாக 110 டிகிரிக்கு மேல் வெயில் பதிவு
  10. லைஃப்ஸ்டைல்
    ‘இலையுதிர்க்காலம் நிரந்தரம் அல்ல’