/* */

தாம்பரம் ரயில் நிலையம் அருகே இன்று தீ விபத்து- பரபரப்பு

தாம்பரம் ரயில் நிலையத்தில் உள்ள பழைய கழிவு பொருட்கள் கிடங்கில் இன்று காலை தீவிபத்து விபத்து ஏற்பட்டது. இதில் யாருக்கும் பாதிப்பு இல்லை.

HIGHLIGHTS

செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் ரயில் நிலையத்தில் உள்ள மின்சார ரயில்களுக்கான பணிமனை அருகே, ரயில்வே பழைய பொருட்கள் கிடங்கு உள்ளது. அப்பகுதியில் இன்று காலை திடீரென தீவிபத்து ஏற்பட்டது. திபுதிபுவென்று நெருப்பு பற்றிக் கொண்டு எரியத் தொடங்கியது.

இதனால், அப்பகுதியே பெரும் புகைமண்டலமாக காட்சியளித்தது. ரயில்வே பணிமனையில் பணியாற்றும் ஊழியா்கள் பெரும்பரப்பரப்பு அடைந்தனா். தீ பணிமனைக்கு பரவினால் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்ற சூழலில், .உடனடியாக ரயில்வே தீயணைப்பு வண்டி மற்றும் தாம்பரம் தீயணைப்பு வண்டி ஆகியன, சம்பவ இடத்திற்கு வந்து சுமாா் 45 நிமிடங்களில் தீயை முழுவதுமாக அணைத்தன.

இதனால் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படவில்லை. தீவிபத்துக்கான காரணம் பற்றி தாம்பரம் ரயில்வே பாதுகாப்பு படை போலீசாா் விசாரணை நடத்துகின்றனா். இச்சம்பவம் தாம்பரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Updated On: 18 Jun 2021 5:50 AM GMT

Related News

Latest News

  1. பல்லடம்
    பல்லடத்தில் வெட்டப்பட்ட மரங்கள்; இயற்கை ஆர்வலர்கள் வேதனை
  2. லைஃப்ஸ்டைல்
    அப்பாவுக்கான பிறந்தநாள் வாழ்த்துகள் :
  3. லைஃப்ஸ்டைல்
    சர்வாதிகாரி என்ற வார்த்தையை உச்சரித்தாலே நினைவில் வரும் ஹிட்லர்
  4. லைஃப்ஸ்டைல்
    உழைக்கும் தோழர்களுக்கு ஒரு சல்யூட்..!
  5. குமாரபாளையம்
    சர்வ சக்தி மாரியம்மன் திருவிழா
  6. லைஃப்ஸ்டைல்
    ஒருபோதும் தன்னை நிரூபிக்க வேண்டியதில்லை. அதன் இருப்பு போதும்! அது தான்...
  7. தமிழ்நாடு
    புதுச்சேரி தேசிய தொழில்நுட்பக்கழகத்தின் புதிய இயக்குநர் பொறுப்பேற்பு
  8. கல்வி
    சென்னை சிப்பெட் வழங்கும் 3 ஆண்டு டிப்ளமோ படிப்புகள்: மாணவர் சேர்க்கை...
  9. லைஃப்ஸ்டைல்
    கஷ்டம் வரும்போது சிரிங்க..! துன்பம் தூசியாகும்..!
  10. வீடியோ
    Adani துறைமுகத்துல போதைப்பொருள் இருந்துச்சு என்ன நடவடிக்கை எடுத்தாங்க...