/* */

தாம்பரத்தில் பயங்கரம்: நாட்டு வெடிகுண்டு வீசி வாலிபா் கொலை; 6 போ் கும்பல் வெறிச்செயல்

தாம்பரம் அருகே பெரும்பாக்கத்தில் வாலிபரை நாட்டு வெடிகுண்டு வீசி 6 போ் கொண்ட கும்பல் கொலை செய்தது. யார் இவர்கள்? எதற்கான இப்படி செய்தார்கள்? என்று போலீசார் விசாரித்து வருகின்றனர்.

HIGHLIGHTS

தாம்பரத்தில் பயங்கரம்: நாட்டு வெடிகுண்டு வீசி வாலிபா் கொலை; 6 போ் கும்பல் வெறிச்செயல்
X

நாட்டு வெடிகுண்டு வீசப்பட்ட பகுதியும், கொலை செய்யப்பட்ட வாலிபரையும் காணலாம்.

செங்கல்பட்டு மாவட்டம் பெரும்பாக்கம் அண்ணா தெருவை சோ்ந்தவர் சரத் (26). இவர் நேற்று இரவு தனது வீட்டு வாசலில் செல்போனில் பேசிக்கொண்டிருந்தார். அப்போது 2 மோட்டார் சைக்கிள்களில் 6 பேர் கொண்ட கும்பல் வந்தது. அவா்களைபாா்த்ததும் சரத் பயந்து ஓடத்தொடங்கினாா்.

ஆனால் அந்த கும்பல் சரத்தை ஓட ஓட விரட்டியது. அதோடு அவா்கள் வைத்திருந்த பையிலிருந்து நாட்டு வெடிகுண்டுகளை எடுத்து சரத் மீது வீசினா். இவ்வாறு தொடர்ந்து அவர்கள் 3 குண்டுகளை வீசினா். அதில் ஒரு குண்டு சரத் தலையில்பட்டு வெடித்தது. இதில் அவரது தலை சிதறி கிழே சாய்ந்தாா். ஆனாலும் அந்த கும்பல் விடவில்லை. தலை சிதறி துடித்துக்கொண்டிருந்த உடலை சரமாறியாக வெட்டினா்.

இதற்கிடையே குண்டு வெடிப்பு சத்தமும், அலறல் சத்தமும் கேட்டு அக்கம்பக்கத்தினா் திரண்டு வந்தனா். உடனே அந்த கும்பல் திரண்டு வந்த கூட்டத்தை கத்திகளை காட்டி மிரட்டி விட்டு, 3 மோட்டாா் சைக்கிள்களில் ஏறி தப்பி ஓடினா்.

இதையடுத்து பொதுமக்கள் போலீசுக்கு தகவல் கொடுத்தனா். பெரும்பாக்கம் போலீசாா் விரைந்து வந்து, உயிரிழந்து கிடந்த சரத் உடலை எடுத்து குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். மேலும் போலீசாா் வழக்குப்பதிவு செய்து நாட்டு வெடிகுண்டுகளை வீசி கொலை செய்துவிட்டு தப்பியோடிய கும்பலை தேடிவருகின்றனா்.

சரத்தை நாட்டு வெடிகுண்டு வீசி கொலை செய்து விட்டு தப்பிய மர்ம கும்பலை சோ்ந்தவா்கள் யார்? எதற்காக கொலை செய்தனர்? என்பது குறித்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர். மேலும் அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளையும் ஆய்வு செய்து வருகிறார்கள்.

இதே பகுதியில் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பும் இதைப்போல் ஒருகும்பல், இரவில் பெட்ரோல் குண்டு வீசி ஒருவரை கொலை செய்தது. அதைப்போல் அதே பகுதியில் உள்ள ஒரு வீட்டிலும் பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டுள்ளன.

எனவே இப்பகுதியில் வெடிகுண்டுகள் வீசப்படுவது தொடா்ந்து நடந்துவருகிறது. அங்கு மேலும் அசம்பாவித சம்பவம் நடக்காமல் இருக்க போலீசாா் குவிக்கப்பட்டுள்ளனா். இதில் சந்தேகத்திற்கிடமான சிலரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

Updated On: 16 Jun 2021 4:15 AM GMT

Related News

Latest News

  1. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  2. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  3. போளூர்
    ஜவ்வாது மலையில் பலாப்பழம் விளைச்சல் அமோகம்: விவசாயிகள் மகிழ்ச்சி!
  4. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  5. திருவண்ணாமலை
    எஸ் கே பி கல்வி குழுமத்தின் மாபெரும் ஓவியம், நடனம், திருக்குறள்,...
  6. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் தேவையற்ற புதைவட கேபிள்களை அகற்ற மனு
  7. குமாரபாளையம்
    பள்ளிபாளையத்தில் கனமழை: பிரதான சாலைகளில் சாய்ந்த இரு மரங்கள்
  8. லைஃப்ஸ்டைல்
    இல்லற வாழ்வில் நல்லறம் கண்ட தம்பதிக்கு வாழ்த்துகள்..!
  9. மேட்டுப்பாளையம்
    கோவில்பாளையம் பகுதியில் 2 கிலோ கஞ்சா சாக்லேட் பறிமுதல்..!
  10. தொழில்நுட்பம்
    சந்திரனில் முதல் ரயில் பாதை அமைக்க நாசா திட்டம்