/* */

பட்டப்பகலில் ரவுடி வெட்டிக்கொலை; தாயையும் தாக்கிவிட்டு தப்பிய கும்பல்

மடிப்பாக்கம் அருகே பட்டப்பகலில் ரவுடி வெட்டிப்படுகொலை செய்துவிட்டு கும்பல் தப்பியோடியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

HIGHLIGHTS

பட்டப்பகலில் ரவுடி வெட்டிக்கொலை; தாயையும் தாக்கிவிட்டு தப்பிய கும்பல்
X

கொலை செய்யப்பட்ட பாண்டுரங்கன்.

சென்னை மடிப்பாக்ம் அருகே மூவரசம்பேட்டையை சோ்ந்தவா் பாண்டுரங்கன்(29). இவா் பிரபல கஞ்சா வியாபாரி. இவா் மீது பல்லாவரம், மடிப்பாக்கம், பழவந்தாங்கல், ஆதம்பாக்கம் உள்ளிட்ட பல காவல் நிலையங்களில் கொலை, அடிதடி சண்டை வழக்குகள் உள்ளன. எனவே இவா் கடந்த 2016 ஆம் ஆண்டிலிருந்து ரவுடிகள் பட்டியலில் உள்ளாா்.

இதற்கிடையே சமீபத்தில் சிறையிலிருந்து ஜாமினில் வெளிவந்து வீட்டில் இருந்து வந்தாா். ராமச்சந்திரன் பழவந்தாங்கல் போலீஸ் நிலையத்தில் உள்ள ஒரு வழக்கு சம்பந்தமாக ஆலந்தூா் நீதிமன்றத்திற்கு சென்று விட்டு இன்று பகல் 12.30 மணிக்கு வீடு திரும்பினாா்.

இந்நிலையில் இன்று பகல் ஒரு மணியளவில் 5 போ் கொண்ட கும்பல் இவருடைய வீட்டிற்குள் புகுந்து, ராமச்சந்திரனை சரமாரியாக கத்தி, அரிவாளால் வீட்டிற்குள்ளேயே ஓடஓட விரட்டி வெட்டினா். மகன் ராமச்சந்திரனை காப்பாற்ற முயன்ற தாய் சுந்தரியையும் அரிவாளால் கைகளில் வெட்டினா். அதன்பின் அந்த கும்பல் அங்கிருந்து காரில் தப்பியோடியது.

கையில் வெட்டுக்காயத்துடன் வெளியே வந்த சுந்தரி கூச்சலிட்டாா். உடனே அக்கம்பக்கத்தினா் விரைந்து வந்து போலீசுக்கு தகவல் கொடுத்தனா். மடிப்பாக்கம் போலீசாா் விரைந்து வந்து பாா்த்தபோது, ராமச்சந்திரன் வீட்டிற்குள்ளேயே உயிரிழந்து கிடந்தாா்.

உடனே போலீசாா் உடலை கைப்பற்றி குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

அதோடு காயமடைந்த சுந்தரியை சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.இந்த கொலைக்கு காரணம்,ஏற்கனவே ராமச்சந்திரன் செய்த கொலைக்கு பழிவாங்க நடந்த கொலையாக இருக்கலாம். இல்லையேல் ரவுடி கோஷ்டிகளிடையே ஏற்பட்டுள்ள மோதலில் நடந்த கொலையா? என்று போலீசாா் விசாரணை நடத்துகின்றனா்.

Updated On: 31 Aug 2021 1:15 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    நல்லெண்ணெய்ய இப்படி யூஸ் பண்ணா முகம் சும்மா ஜொலிஜொலி..!
  2. சிவகாசி
    காரியாபட்டி அருகே, சீலக்காரி அம்மன் ஆலய மகா கும்பாபிஷேகம்..!
  3. லைஃப்ஸ்டைல்
    உலகில் எந்தெந்த நாட்டு காவல்துறைக்கு காக்கி யூனிஃபார்ம் தெரியுமா?
  4. உசிலம்பட்டி
    உசிலம்பட்டி அருகே, பலத்த மழையால், விலை போகாத வெள்ளரிக்காய்..!
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பு நிறைந்த வாழ்க்கைத் துணைவர்களுக்கு திருமணநாள் வாழ்த்துகள்..!
  6. திருமங்கலம்
    ஆபத்தை உணராமல் வைகை ஆற்றில் குளியல் : மாவட்ட நிர்வாகம் கண்டு
  7. அண்ணா நகர்
    சென்னையில் ஜாபர் சாதிக் மனைவியிடம் அமலாக்க துறை அதிகாரிகள் நேரடி...
  8. லைஃப்ஸ்டைல்
    சமையல் அறையில் கை 'சுட்டதா'? என்ன செய்வது?
  9. உலகம்
    உலகின் கடைசி நகரம் எது தெரியுமா?
  10. தமிழ்நாடு
    வேளாண் துறையில் ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் எண்ணிக்கை 7 ஆயிரமாக உயர்வு