/* */

தாம்பரம் அருகே பெருங்களத்தூரில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

தாம்பரம் அருகே பெருங்களத்தூரில் போக்குவரத்து போலீசார் சார்பில் சாலை விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

HIGHLIGHTS

தாம்பரம் அருகே பெருங்களத்தூரில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி
X
பெருங்களத்தூர் பேருந்து நிலையத்தில் சாலை விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

செங்கல்பட்டு மாவட்டம், தாம்பரம் அடுத்த பெருங்களத்தூ பேருந்து நிலையம் அருகே ஜி.எஸ்.டி.சாலையில் சென்னை போக்குவரத்து போலீசார் மற்றும் அன்னை வேளாங்கண்ணி கல்லூரி இணைந்து கொரோனா விழிப்புணர்வு மற்றும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தினர்.

அன்னை வேளாங்கண்ணி கல்வி நிறுவனங்களின் செயலாளர் டாக்டர் தேவ் ஆனந்த் தலைமையில் நடந்த இந்த நிகழ்ச்சியில் துணை ஆணையர் குமார் மற்றும் உதவி ஆணையர் ஶ்ரீதர் ஆகியோர் போக்குவரத்து காவலர்கள் மற்றும் ஆட்டோ ஓட்டுனர்கள், பொதுமக்களுக்கு முககவசம், சானிடேசர் ஆகியவற்றை வழங்கினர்.

அதனை தொடர்ந்து போக்குவரத்து விதிகள் அடங்கிய துண்டு பிரசுரங்களை வாகன ஓட்டிகளுக்கு போக்குவரத்து காவலர்கள் வழங்கினர்.

நிகழ்ச்சியில் அன்னை வேளாங்கண்ணி கல்வி நிறுவனங்களின் செயலாளர் டாக்டர் தே.தேவ் ஆனந்த், தாம்பரம் போக்குவரத்து ஆய்வாளர் ஜெயவேல், கல்லூரி துணை முதல்வர் திருப்பதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 17 July 2021 1:20 PM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    தமிழகத்தில் தேனி, விருதுநகர், தென்காசி மாவட்டங்களுக்கு கனமழை...
  2. இந்தியா
    தொலை தொடர்புத் துறை பெயரில் போலி அழைப்புகள்: மத்திய அரசு எச்சரிக்கை
  3. லைஃப்ஸ்டைல்
    அன்னைக்கு இன்னைக்கு பிறந்தநாள்..! வாழ்த்துகிறோம்..!
  4. லைஃப்ஸ்டைல்
    வார்த்தைகளால் பூ தொடுத்து அக்காவுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  5. இந்தியா
    உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த நான்கு மாத குழந்தை!
  6. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி கோர்ட்டில் ஆஜர்: சவுக்கு சங்கர் லால்குடி கிளை சிறையில்...
  7. லைஃப்ஸ்டைல்
    வீட்டில் இருந்தபடியே பெண்கள் சம்பாதிப்பது எப்படி?
  8. ஆன்மீகம்
    நடப்பாண்டில் வைகாசி விசாகம் எப்போது வருகிறது தெரியுமா?
  9. லைஃப்ஸ்டைல்
    ருசியான எண்ணெய் கத்திரிக்காய் கிரேவி செய்வது எப்படி?
  10. கல்வி
    எமிஸ் தளத்தில் பொது மாறுதல் கேட்டு விண்ணப்பித்த 13,484 ஆசிரியர்கள்