தொடர் கனமழையால் தாம்பரம் சுற்றுவட்டார பகுதிகளில் சூழ்ந்த மழைநீர்
புறநகர் பகுதிகளான தாம்பரம், பல்லாவரம்,செம்பாக்கம்,பம்மல்,அனகாபுத்தூர், திருநீர்மலை, முடிச்சூர்,சேலையூர் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை
HIGHLIGHTS
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி சென்னை உட்பட பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில் இன்று காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையை கடக்கும் நிலையில் நேற்று மாலை முதல் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் தொடர் மழை பெய்து வருகிறது.
இந்த நிலையில் தாம்பரம் அடுத்த செம்பாக்கம் திருமலை நகர் பகுதிகளில் தொடர் கனமழையால் அனைத்து குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் சூழ்ந்ததால் மக்கள் கடும் அவதி அடைந்துள்ளனர். அதேபோல் புறநகர் பகுதிகளான தாம்பரம், பல்லாவரம்,செம்பாக்கம்,பம்மல்,அனகாபுத்தூர், திருநீர்மலை, முடிச்சூர்,சேலையூர் உள்ளிட்ட பகுதிகளில் கன மழை பெய்து வருகிறது.
இதனால் குடியிருப்பு பகுதிகளில் மழை நீர் சூழ்ந்து மக்கள் வெளிவரமுடியாமல் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். அத்தியாவசியமான தேவையான பால் மருத்துவம் ஆகியவற்றிற்கு கூட வெளிவரமுடியாமல் தவிக்கின்றனர். மேலும் தாழ்வான சாலைகளில் ஆறுபோல் மழை நீர் செல்கின்றன.
ராஜகீழ்பாக்கம் பகுதியில் பெய்த மழையின் காரணமாக ஏரிகரையில் உள்ள மரங்கள் முறிந்து விழுந்தன. அதே போல் தாம்பரம் சுற்றுவட்டார பகுதிகளில் ஏரிகளில் நிர்ம்பி மழைநீர் வெளியேறுவதால் சாலைகளிலும், குடியிப்பு பகுதிகளிலும் வெள்ளம் நீர் சூழ்ந்துள்ளது. இதானல் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.