/* */

செங்கல்பட்டு மாவட்ட முக்கிய சாலைகளில் போலீசார் தீவிர வாகன சோதனை!

செங்கல்பட்டு மாவட்டத்தில் முக்கிய சாலைகளில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

HIGHLIGHTS

செங்கல்பட்டு மாவட்ட முக்கிய சாலைகளில் போலீசார் தீவிர வாகன சோதனை!
X

செங்கல்பட்டு தேசிய நெடுஞ்சாலை பரனூர் சுங்கச்சாவடியில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்ட காட்சி.

தமிழகம் முழுவதும் இன்று முதல் ஒரு வார காலத்திற்கு முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக சென்னையின் முக்கிய நுழைவாயிலாக கருதப்படும் செங்கல்பட்டு தேசிய நெடுஞ்சாலை பரனூர் சுங்கச்சாவடியில் போலீசார் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

மாவட்டம் விட்டு மாவட்டம் செல்பவர்களின் இ பாஸ் சரிபார்க்கப்பட்ட பின்னரே அனுமதிக்கப்படுகின்றனர். முறையான ஆவணம் இல்லாத வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்து வழக்குப்பதிவு செய்து வருகின்றனர்.

மேலும் அத்தியாவசிய பொருட்களை கொண்டு செல்லும் வாகனங்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கின்றனர். பழைய மகாபலிபுரம் சாலை, ஈசிஆர் சாலை, திருப்போரூர் சாலை, தாம்பரம் ,பல்லாவரம், திருப்போரூர், மதுராந்தகம், ஆத்தூர், சுங்கச்சாவடி உள்ளிட்ட முக்கிய சாலைகளை தடுப்பு வேலிகள் கொண்டு அமைத்து போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

Updated On: 24 May 2021 4:05 AM GMT

Related News

Latest News

  1. உலகம்
    59 ஆண்டு கால 'லீ' அரசியல் சகாப்தம் முடிவுக்கு வந்தது எப்படி?
  2. பூந்தமல்லி
    கூவம் ஆற்றின் அருகே வீடுகளை அப்புறப்படுத்த நோட்டீஸ்: மக்கள் சாலை...
  3. கலசப்பாக்கம்
    கலசப்பாக்கம் வட்டாட்சியர் அலுவலகத்தில் அலுவல் ஆய்வுக் கூட்டம்
  4. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்டத்தில் 108 ஆம்புலன்ஸ் பணிக்கு 71 பேர் தேர்வு
  5. நாமக்கல்
    வீடு ஒதுக்கீடு பெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு வட்டியில்லா வங்கிக் கடன்:...
  6. போளூர்
    நான்கு வழிச்சாலை திட்டங்கள் கண்காணிப்புப் பொறியாளா் ஆய்வு
  7. திருவண்ணாமலை
    வாக்கு எண்ணிக்கை முன்னேற்பாடு பணிகள் ஆய்வுக் கூட்டம்
  8. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  9. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  10. திருவண்ணாமலை
    திருவண்ணாமலைக்கு மீண்டும் கோயம்பேட்டில் இருந்து பேருந்துகள்:...