/* */

வெளிப்படையாக நடந்த ஆசிரியர் கலந்தாய்வு: முதலமைச்சருக்கு ஆசிரியர் சங்கம் நன்றி

ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு ஒளிவு மறைவின்றி நடத்தப்பட்டதற்கு ஆசிரியர் சங்கம் முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்தனர்

HIGHLIGHTS

வெளிப்படையாக நடந்த ஆசிரியர் கலந்தாய்வு: முதலமைச்சருக்கு ஆசிரியர் சங்கம் நன்றி
X

 செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத் தலைவர் கு.தியாகராஜன்

ஆசிரியர் கலந்தாய்வு பணியிடங்கள் ஒளிவு மறைவின்றி, அரசியல் தலையீடு இல்லாமல் நடைபெற்றதாக ஆசிரியர் சங்கம் சார்பில் முதல்வருக்கு நன்றி தெரிவித்தனர்.

செங்கல்பட்டு மாவட்டத்திற்கான கலந்தாய்வு, தாம்பரம் அடுத்த கார்லி பள்ளியில், ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு பள்ளிக் கல்வித்துறை, தொடக்க கல்வித்துறையில், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முன்னிலையில் நடைபெற்றது.

பள்ளிக் கல்வித் துறையில் வரலாற்றில் எந்த ஒரு பணியிடமும் மறைக்கபடாமல் ஒரு ஒளிவு மறைவற்ற கலந்தாய்வு என்பது இந்த ஆண்டு தான் பள்ளிக்கல்வித்துறை வரலாற்றில் நடந்து கொண்டிருக்கிறது. கிட்டத்தட்ட முடியக்கூடிய தருவாயில் இருந்து கொண்டிருக்கிறது.

தமிழகத்தில் இருக்கக்கூடிய எந்த ஒரு காலி பணியிடமும் குறிப்பாக தமிழக முதல்வர் சிறப்பு கவனம் செலுத்தி தேர்தல் அறிக்கையிலே ஒளிவு மறைவற்ற கலந்தாய்வு நடத்தப்படும் என்று அவர் சொன்ன வாக்குறுதியை நிறைவேற்றும் விதமாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சரிடம் அறிவுறுத்தி அதன் விளைவாக அமைச்சர் கவனம் எடுத்து எந்தவொரு அரசியல், துறை ரீதியாகவோ மறைக்கப்படாமல் அத்துனையும் காண்பித்து நடத்தக்கூடிய கலந்தாய்வாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

தமிழகத்தில் இருக்கக்கூடிய ஆசிரியர் பெருமக்கள் தங்களுடைய ஊருக்கே எந்த வித பைசா கூட இல்லாமல் இந்த கலந்தாய்வில் கலந்து கொண்டு மாறுதல் பெற்று சென்று கொண்டிருக்கிறார்கள். ஒட்டுமொத்த ஆசிரியர் இனம் மிகுந்த மகிழ்ச்சியிலேயெ இருந்து கொண்டிருக்கிறது. சொன்னதை செய்திருக்கிறார் முதல்வர் என தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம் சார்பில் அதன் தலைவர் கு.தியாகராஜன் முதலமைச்சருக்கும், கல்வி அமைச்சருக்கும் நன்றி தெரிவிப்பதாக கூறினார்.

Updated On: 16 March 2022 3:30 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அமைதி உங்களுக்குள்தான் இருக்கிறது..? வெளியில் ஏன் தேடுகிறீர்கள்..?
  2. லைஃப்ஸ்டைல்
    நம்பிக்கை ஊட்டும் மேற்கோள்கள்: வாழ்க்கையை வெற்றிபெறும் திறவுகோல்!
  3. கவுண்டம்பாளையம்
    கோவை விமான நிலையத்தில் 1.220 கிலோ தங்ககட்டிகள் பறிமுதல்
  4. மேட்டுப்பாளையம்
    கோவையில் சட்டவிரோதமாக தங்கி பணிபுரிந்து வந்த இரு வங்கதேச இளைஞர்கள்...
  5. லைஃப்ஸ்டைல்
    மன ஆரோக்கியத்திற்கு வழி செய்யும் தந்திரங்கள்
  6. வீடியோ
    🔴LIVE : தெலுங்கானாவில் அண்ணாமலையின் அனல் பறக்கும் உரை || #annamalai...
  7. தமிழ்நாடு
    சவுக்கு சங்கர் மீது சென்னையில் வழக்கு..!
  8. உலகம்
    பற்களை திருடி விற்று கோடீஸ்வரரான பலே மருத்துவர்
  9. நாமக்கல்
    50 சட்ட தன்னார்வ தொண்டர்கள் தேர்வுக்கு விண்ணப்பிக்க அழைப்பு
  10. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கைக்கு ஏற்ற பாசிடிவ் மேற்கோள்கள்....!