Begin typing your search above and press return to search.
தாம்பரத்தில் நடமாடும் மருத்துவ முகாம் : அமைச்சர் தா.மோ.அன்பரசன் துவக்கி வைத்தார்
தாம்பரத்தில் வடகிழக்கு பருவமழை சிறப்பு நடமாடும் மருத்துவக் குழு முகாமை அமைச்சர் தா.மோ.அன்பரசன் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
HIGHLIGHTS
செங்கல்பட்டு மாவட்டம், தாம்பரம் கோட்டத்துக்கு உட்பட்ட பெரும்பாக்கம் பகுதியில் வடகிழக்கு பருவமழை சிறப்பு மருத்துவ முகாம் மற்றும் நடமாடும் மருத்துவக் குழு முகாமை ஊரக தொழில் துறை அமைச்சர் தா மோ அன்பரசன் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் சோழிங்கநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் அரவிந்த் ரமேஷ், செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ஆ.ராகுல் நாத், தமிழ்நாடு தொழில் பயிற்சி இயக்குனர் வீரராகவ ராவ், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் மேலாண்மை இயக்குனர் கோவிந்த ராவ், இணை மேலாண்மை இயக்குனர் சிவகிருஷ்ணமூர்த்தி, சென்னை மாநகராட்சி துணை தெற்கு துணை ஆணையர் சிம்ரன் ஜித், மற்றும் அரசு அலுவலர்கள் பொதுமக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்