/* */

செங்கல்பட்டு அருகே பூட்டிய வீட்டில் நகை, பணம், கார் திருட்டு

செங்கல்பட்டு மாவட்டம் முடிச்சூா் அருகே பூட்டிய வீட்டில் நகை, பணம், காரை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

HIGHLIGHTS

செங்கல்பட்டு அருகே பூட்டிய வீட்டில் நகை, பணம், கார் திருட்டு
X

செங்கல்பட்டு அருகே பூட்டிய வீட்டில்  மர்ம கொள்ளை

செங்கல்பட்டு மாவட்டம், தாம்பரம் அருகே முடிச்சூர் லட்சுமி நகரில் வசித்து வருபவர் கருப்பையா(62). இவருக்கு சொந்த ஊா் ராமநாதபுரம்.அவருடைய தம்பி கோவிந்தன் என்பவர் ராமநாதபுரத்தில் உடல்நிலை சரியில்லாமல் இறந்து விட்டாா்.

இதையடுத்து கருப்பையா தம்பியின் இறுதி சடங்கில் கலந்து கொள்வதற்காக,வீட்டை பூட்டிவிட்டு குடும்பமாக கடந்த 27 ஆம் தேதி சொந்த ஊருக்கு புறப்பட்டு சென்றுவிட்டனர்.

இந்நிலையில் அவரது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதை, பக்கத்து வீட்டினா் பார்த்துவிட்டு வீட்டின் உரிமையாளருக்கும், பீர்க்கன்காரணை போலீசுக்கும் தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டனா்.

மர்மநபர்கள் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து, பீரோவில் இருந்த 6 சவரன் தங்க நகை,ரூ.50 ஆயிரம் பணம், 2 வெள்ளி குத்துவிளக்குகள் மற்றும் வீட்டில் உள்ள மின்சாதனப்பொருட்கள் ஆகியவற்றை மூட்டைகட்டி எடுத்துக் கொண்டனர்.

அதன் பின்பு கருப்பையாவின் காா் சாவி வீட்டு மேஜையில் இருந்தது.அதை எடுத்து வீட்டில் நிறுத்தியிருந்த காரையும் திருடிக்கொண்டு சென்றுள்ளனா்.கொள்ளையா்கள் வரும்போது,இரு சக்கர வாகனத்தில் வந்துள்ளனா்.அந்த இருசக்கர வாகனத்தை கருப்பையா வீட்டிலேயே விட்டு சென்றிருந்தனா்.

போலீசாா் அந்த இரு சக்கர வாகனத்தை கைப்பற்றி விசாரணை நடத்தினா். அது திருட்டு வண்டி என்பது தெரியவந்தது. கருப்பையா 22 சவரன் தங்க நகைகளை வீட்டில் அரிசி மூடைக்குள் மறைத்து வைத்திருந்தாா்.அது கொள்ளையா்களிடம் சிக்கவில்லை.

பீா்க்கன்காரணை போலீசாா் வழக்குப்பதிவு செய்து,கைரேகை நிபுணா்கள் மூலம் ரேகைகளை பதிவு செய்து விசாரணை நடத்துகின்றனா்.அதோடு அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளையும் ஆய்வு செய்து வருகின்றனர்.

Updated On: 30 Sep 2021 8:15 AM GMT

Related News

Latest News

  1. அரசியல்
    5 ஆண்டுகள் தூங்கிய ஜெகன் அண்ணனை வறுத்தெடுத்த தங்கை..!
  2. லைஃப்ஸ்டைல்
    ரமலான் காலத்தில் உடல் பலமும், மன வலிமையும்
  3. பட்டுக்கோட்டை
    வயலில் பாசி படர்ந்தால் நெல் எப்படி சுவாசிக்கும்? எப்படி சத்துக்களை...
  4. லைஃப்ஸ்டைல்
    கஷ்டங்கள் யாவும் கடந்து போகும்.. தோல்வியா? தூசிதான்!
  5. ஈரோடு
    ஈங்கூர் இந்துஸ்தான் கல்லூரியில் மாநில கைப்பந்து முகாம் நிறைவு விழா
  6. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் பொதுமக்களுக்கு இலவசமாக மோர் வழங்கிய போலீசார்
  7. வீடியோ
    🔥உனக்கு 24-மணிநேரம்தான் Time விஜயபாஸ்கர் மிரட்டல்🔥|மோதிக்கொண்ட...
  8. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் 'கூல்' ஆக இருப்பது எப்படி?
  9. திருவள்ளூர்
    அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி மாவட்ட ஆட்சியரிடம் பொதுமக்கள் மனு
  10. ஆவடி
    ஆவடி அருகே நகைக்கடையில் கொள்ளை: கொள்ளையர்களுக்கு உதவிய இருவர் கைது