Begin typing your search above and press return to search.
குட் லைப் ஆதரவற்றோர் குழந்தைகள் இல்லம் : தாம்பரம் போலீசார் தீபாவளி கொண்டாட்டம்
தாம்பரத்தில் குட்லைப் ஆதரவற்றோர் குழந்தைகள் இல்லத்தில் தாம்பரம் போலீசார் தீபாவளியை கொண்டாடினர்.
HIGHLIGHTS
செங்கல்பட்டு மாவட்டம், தாம்பரத்தில் குட்லைப் ஆதரவற்றோர் குழந்தைகள் இல்லத்தில் தாம்பரம் காவல்துறை சார்பில் தீபாவளி திருநாள் கொண்டாடபட்டது.
இந்நிகழ்ச்சியில் தோமையார்மலை சரக காவல் துறை இணை ஆணையாளர் ரவீந்திரன் மற்றும் துணை ஆணையாளர் அருன்பாலகோபாலன் கலந்து கொண்டு ஆதரவற்ற குழந்தைகளின் நடன நிகழ்ச்சியை கண்டு மகிழந்தனர்.
இதனை தொடர்ந்து அனைவருக்கும் தீபாவளி பட்டாசு, மற்றும் மத்தாப்புகளை வழங்கி அவர்களுடன் இணைந்து மத்தாப்பு கொளுத்தி தீபாவளி நல்வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டனர்.
இதில் தாம்பரம் காவல் உதவி ஆணையாளர் சீனிவாசன், ஆய்வாளர்கள், சார்லஸ், முருகன் மற்றும் உதவி ஆய்வாளர்கள், தலைமை காவலர்கள் உட்பட ஏராளமனோர் கலந்து கொண்டனர்