/* */

ஏரி மேய்க்கால் ஆக்கிரமிப்புகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்த திமுக தலைவர் கைது

மதுரபாக்கம் திமுக தலைவர் வேல்முருகன் பொதுமக்களுடன் சோர்ந்து வீடுகளை இடிக்க எதிர்ப்பு தெரிவித்ததால் கைது செய்யப்பட்டனர்

HIGHLIGHTS

ஏரி மேய்க்கால் ஆக்கிரமிப்புகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்த திமுக தலைவர் கைது
X

 நீதிமன்ற உத்தரவுப்படி தாம்பரம் அடுத்த மதுரபாக்கம் கிராமத்தில் ஏரி மேய்க்கால் புறம்போக்கு நிலத்தில் கட்டப்பட்ட வீட்டை இடிக்கும் வருவாய்த்துறையினர்

ஏரி மேய்க்கால் ஆக்கிரமிப்புகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்த திமுக தலைவர் உட்பட பொது மக்களை போலீசார் கைது செய்தனர்.

செங்கல்பட்டு மாவட்டம், தாம்பரம் அடுத்த மதுரபாக்கம் கிராமத்தில் ஏரி மேய்க்கால் புறம்போக்கு நிலத்தில் 137 வீடுகள் ஆக்கிரமித்து கட்டப்பட்டிருப்பதாக அதே பகுதியை சேர்ந்த மனோகர் என்பவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.அதனடிப்படையில் உயர் நீதிமன்றம் ஆக்கிரமிப்பு குடியிருப்புகளை அகற்ற உத்தரவிட்டது.

நீதிமன்ற உத்தரவிற்கு பிறகும் அக்கிரமிப்புகளை அகற்ற தவறிய அதிகாரிகளுக்கு நீதிமன்றம் அபராதம் விதித்தது.அதனால் இன்று பள்ளிகரணை துணை ஆணையர் ஜோஷ் தங்கையா தலைமையில் பலத்த போலீசார் பாதுகாப்போடு வருவாய்த்துறை அதிகாரிகள் இடிக்க வந்த போது பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியும் மதுரபாக்கம் திமுக தலைவர் வேல்முருகன் மக்களோடு மக்களாய் நின்று வீடுகளை இடிக்க ஒப்புக் கொள்ளவில்லை.இதனால் போலீசார் மதுரப்பாக்கம் திமுக ஊர் தலைவர் வேல் முருகன், துணைத்தலைவர் புருஷோத்தமன் ஆகியோர் உட்பட பொதுமக்களை குண்டுகட்டாக தூக்கிச் சென்று போலீசார் கைது செய்தனர். இதனால் அப்பகுதி பரப்பாக காணப்படுகிறது. சிலர் ஜேசிபி இயந்திரத்தின் முன்பு படுத்துக் கொண்டும், கதறி அழுத காட்சியும் பரிதாபமாக இருந்தது.

Updated On: 6 Aug 2022 3:00 PM GMT

Related News

Latest News

  1. திருத்தணி
    குடிதண்ணீர் வழங்காததை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியல்!
  2. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்
  3. நாமக்கல்
    EVM அறைகளை கண்காணிக்க கூடுதலாக 10 சிசிடிவி கேமராக்கள்!
  4. வந்தவாசி
    கோடைகால விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்!
  5. திருவண்ணாமலை
    கூட்டாய்வுக்கு உட்படுத்தாத வாகனங்களுக்கு அனுமதி இல்லை, கலெக்டர்...
  6. லைஃப்ஸ்டைல்
    சமையலுக்கு ஏற்ற சிறந்த எண்ணெய் எது தெரியுமா?
  7. கோவை மாநகர்
    சவுக்கு சங்கர் நீதிமன்ற காவலில் கோவை சிறையில் அடைப்பு
  8. லைஃப்ஸ்டைல்
    டெல்லிக்கு ராசானாலும் பாட்டி சொல்லை தட்டாதே!
  9. லைஃப்ஸ்டைல்
    வணக்கம்... பலமுறை சொன்னேன், சபையினர் முன்னே! - தமிழில் காலை வணக்கம்...
  10. வீடியோ
    தமிழ்நாடு கெட்டு போனதுக்கு காரணம் சினிமா தான்! #mysskin| #hinduTemple|...