/* */

ஏரியில் மிதந்து வந்த 2 அடி முதலைக்குட்டி: பீதியடைந்த பொதுமக்கள்

தாம்பரம் அருகே, ஏரியில் இருந்து வந்த 2 அடி முதலை குட்டியை பிடித்து, பொதுமக்கள் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.

HIGHLIGHTS

ஏரியில் மிதந்து வந்த 2 அடி முதலைக்குட்டி: பீதியடைந்த பொதுமக்கள்
X

ஏரியில் மிதந்து வந்த முதலைக்குட்டி.

செங்கல்பட்டு மாவட்டம், தாம்பரம் அருகே பெருங்களத்தூா், சதானந்தபுரம் எம்ஜிஆர் நகர் ஏரியில், 10 க்கும் மேற்பட்ட முதலைகள் இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில், இன்று காலை ஏரிக்கரையோரம், இரண்டு அடி நீளம் கொண்ட முதலை குட்டி ஒன்று தண்ணீா் கரையோரம் ஒதுங்கி இருந்தது.

ஏரியில் மீன் பிடித்து விளையாடிக்கொண்டிருந்த சிறுவா்கள் சிலா் இதை பாா்த்து, ஊா் மக்களிடம் கூறினர். தகவலின் பேரில் போலீஸ், வனத்துறைக்கு தகவல் கொடுத்தனா். இதனிடையே, மக்கள் நடமாட்டம் இருந்ததால், முதலை மீண்டும் தண்ணீருக்குள் செல்ல முயன்றது. அதற்குள், கனமான நைலான் கயிற்றால் கட்டி இழுத்து, முதலைக்குட்டியை வெளியே கொண்டு வந்து, பாதுகாப்பாக அங்கு தனியாக வைத்தனர்.

அப்பகுதியினர் கூறுகையில், இந்த ஏரியில் 8அடி முதல் 10 அடி நீளம் கொண்ட 10 க்கும் மேற்பட்ட முதலைகள் உள்ளன. இதனால் அப்பகுதியில் வசித்து வருபவர்கள் தினமும் பதற்றத்துடன் இருந்து வருகின்றனர். வனத்துறை அதிகாரிகள், உடனடியாக முதலைகளை பிடிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

Updated On: 25 Sep 2021 10:00 AM GMT

Related News

Latest News

  1. திருவண்ணாமலை
    அண்ணாமலையார் கோயிலில் வரும் 4 ம் தேதி முதல் தாராபிஷேகம்
  2. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை; இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை
  3. இந்தியா
    மே மாதம் எந்தெந்த நாட்கள், எந்தெந்த பகுதிகளில் வங்கி விடுமுறை என்று...
  4. லைஃப்ஸ்டைல்
    நோயின் அறிகுறிகளை முன்பே காட்டும் நகங்கள் பற்றி தெரிஞ்சுக்கலாமா?
  5. லைஃப்ஸ்டைல்
    தொட்டால் சிணுங்கி செடியில் இத்தனை ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  6. தாராபுரம்
    குட்டையாக மாறிய உப்பாறு அணை; விவசாயிகள் வேதனை
  7. லைஃப்ஸ்டைல்
    ஏழு எளிய வழிகளில் உடல் கொழுப்பை கரைக்கலாம் - எப்படீன்னு...
  8. சினிமா
    ‘எப்போதும் கொண்டாடப்பட வேண்டியவர் கங்கை அமரன்’
  9. திருப்பூர் மாநகர்
    பின்னலாடைத் துறையில் வேலை வாய்ப்பு: ஏற்றுமதியாளா்கள் சங்கத்துக்கு...
  10. திருப்பூர் மாநகர்
    பின்னலாடை இயந்திரங்கள், உதிரிபாகங்களை உள்நாட்டிலேயே தயாரிக்க...