ஒரு பிரியாணி வாங்கினால் ஒரு பிரியாணி இலவசம்: முண்டியடித்த கூட்டத்தால் போக்குவரத்து பாதிப்பு

சென்னை தாம்பரம் முத்துலிங்கம் முதலி தெருவில் புதிதாக யாமொய்தீன் பிரியாணி கடை இன்று திறக்கப்பட்டது. இந்த கடையில் திறப்பு விழா சலுகையாக ஒரு பிரியாணி வாங்கினால் ஒன்று இலவசம், இரண்டு மட்டன் பிரியாணி வாங்கினால் ஒரு மட்டன் பிரியாணி இலவசம் என விற்பனை செய்ததால் அதனை வாங்க கூட்டம் அலை மோதிக் கொண்டிருக்கிறது.
கொரோனா பரவல் இருக்கும் இந்த சூழ்நிலையில் அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வரும் நிலையில், கொரோனா விதிமுறைகளை காற்றில் பறக்க விட்டு, சமூக இடைவெளியில்லாமல் கூடி இருக்கின்றனர். இதனால் நோய்த் தொற்று எளிதில் பரவக்கூடிய வாய்ப்புள்ளது.
இலவச பிரியாணியை வாங்க கூட்டம் அலை மோதுவதால் தாம்பரம் மார்கெட் பகுதியில் இருந்து ஜி.எஸ்.டி. சாலைக்கு வருபவர்களும், முத்து லிங்க முதலி தெருவில் இருந்து வருபவர்களும் வாகன நெரிசலில் சிக்கி தவித்தனர்.
தாம்பரம் போலீசார் வந்து சொல்லி விட்டு செல்கிறார்கள் ஆனாலும் கூட்டம் குறையவில்லை. தாம்பரம் மாநகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu