/* */

கோவிலஞ்சேரி குளத்தில் நீரில் மூழ்கி 7 வயது சிறுவன் பலி

தாம்பரம் அருகே, கோவிலஞ்சேரி குளத்தில் நீரில் மூழ்கி 7 வயது சிறுவன் பலியானது சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

HIGHLIGHTS

கோவிலஞ்சேரி குளத்தில் நீரில் மூழ்கி 7 வயது சிறுவன் பலி
X

பலியான சிறுவன் சூர்யா. 

சென்னை தாம்பரம் அடுத்த அகரம் மெயின் ரோடு அருகே கோவிலஞ்சேரி கிராமத்தில் குளம் உள்ளது. இங்கு, 7 வயது சிறுவன் சூர்யா, அவனுடன் 13 வயது அக்கா காவியா, 12 வயது அண்ணன் மணிகண்டன் ஆகியோர், குளத்தில் குளிக்கச் சென்றிருந்தனர்.

குளத்தின் கரையோரத்தில் மூவரும் குளித்துக் கொண்டிருந்த போது, சூர்யா மட்டும் நீரில் மூழ்கியுள்ளான். இருவரும் சூர்யா மூழ்கியதை கண்டு கூச்சலிட்டனர். உடனே அருகில் இருந்த விவசாயி ஒருவர், குளத்தில் இருந்து சூர்யாவை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அழைத்து சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

தகவலறிந்து சென்ற சூர்யாவின் பெற்றோர் முருகன், ரங்கநாயகி ஆகியோர், உடலை வீட்டிற்கு எடுத்து சென்றனர். இதையறிந்த சேலையூர் போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர்.

Updated On: 3 May 2022 11:45 PM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிவிப்புகளை...
  2. லைஃப்ஸ்டைல்
    வைட்டமின் ஈ காப்ஸ்யூல் பயன்படுத்த அழகு டிப்ஸ்!
  3. லைஃப்ஸ்டைல்
    நீங்கள் கண் சிமிட்டிக் கொண்டே இருக்கறீங்களா?
  4. லைஃப்ஸ்டைல்
    பிரியும் விடைக்கு ஏன் பிரியாவிடை..?
  5. வானிலை
    வானிலை முன்னறிவிப்பு: டெல்லி, உ.பி., ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில்...
  6. இந்தியா
    ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்: முடிவுக்கு வந்த போராட்டம், இயல்பு நிலை...
  7. லைஃப்ஸ்டைல்
    தண்ணீரை மென்று சாப்பிடு; சாப்பாட்டை குடி..!
  8. லைஃப்ஸ்டைல்
    சந்தோஷம் மின்னல் போல வந்து வந்து போகும்; அமைதி எப்போதுமே நிரந்தரமானது...
  9. கோவை மாநகர்
    கோவை நகரப் பகுதிகளில் மிதமான மழை ; மக்கள் மகிழ்ச்சி
  10. வீடியோ
    Savukku வழக்கில் மூன்று நாட்களில் நடந்தது என்ன? | அடுத்து என்ன...