/* */

பெற்றோர் கண்டித்ததால் 11ம் வகுப்பு மாணவி தூக்கிட்டு தற்கொலை

பெருங்களத்தூரில் பெற்றோர் கண்டித்ததால் 11ம் வகுப்பு மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

HIGHLIGHTS

பெற்றோர் கண்டித்ததால் 11ம் வகுப்பு மாணவி தூக்கிட்டு தற்கொலை
X

பைல் படம்.

தாம்பரம் அடுத்த புது பெருங்களத்தூர் ஆர்.எம்.கே நகரை சேர்ந்தவர் விஜயன் மேஸ்திரி வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி கோமதி (33) இவர்களுக்கு மூன்று மகள்கள் உள்ள நிலையில், இரண்டாவது மகள் மாலினி (16) சேலையூரில் உள்ள தனியார் பள்ளியில் பதினொராம் வகுப்பு படித்து வந்தார்.

இந்நிலையில் நேற்று, மாலினி சரியாக படிக்கவில்லை என்று பெற்றோர் கண்டித்ததாக கூறப்படுகிறது. இதனால் மன உளைச்சலில் இருந்த சிறுமி தனது அறைக்கு சென்றவர் இன்று காலை வரை கதவை திறக்காத்தால் சந்தேகம் அடைந்த பெற்றோர் கதவை உடைத்து பார்த்தனர். அப்போது மாலினி கயிற்றால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். மேலும் இது குறித்து பீர்க்கன்காரனை போலிசாருக்கு தகவல் அளித்தனர்.

சம்பவ இடத்திற்கு வந்த போலிசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, வழக்குபதிவு செய்து தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.

Updated On: 18 Oct 2021 5:30 AM GMT

Related News

Latest News

  1. அரசியல்
    ராகுல் குறித்து கூறிய கருத்துக்கு ரஷ்ய செஸ் வீரர் கேரி காஸ்பரோவ்...
  2. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  3. பொன்னேரி
    ஸ்ரீ கரி கிருஷ்ணா பெருமாள் கோவிலின் தெப்பத் திருவிழா!
  4. திருத்தணி
    குடிதண்ணீர் வழங்காததை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியல்!
  5. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்
  6. நாமக்கல்
    EVM அறைகளை கண்காணிக்க கூடுதலாக 10 சிசிடிவி கேமராக்கள்!
  7. வந்தவாசி
    கோடைகால விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்!
  8. திருவண்ணாமலை
    கூட்டாய்வுக்கு உட்படுத்தாத வாகனங்களுக்கு அனுமதி இல்லை, கலெக்டர்...
  9. லைஃப்ஸ்டைல்
    சமையலுக்கு ஏற்ற சிறந்த எண்ணெய் எது தெரியுமா?
  10. கோவை மாநகர்
    சவுக்கு சங்கர் நீதிமன்ற காவலில் கோவை சிறையில் அடைப்பு