/* */

பச்சிளம் குழந்தை ஏரியில் வீசி படுகொலை

பச்சிளம் குழந்தை ஏரியில் வீசி படுகொலை
X

தாம்பரம் மாடம்பாக்கம் அருகே பிறந்து ஒரு நாளே ஆன பச்சிளம் ஆண் குழந்தையை ஏரி தண்ணீரில் வீசி படுகொலை செய்தவரை போலீசாா் தேடி வருகின்றனர்.

செங்கல்பட்டு மாவட்டம் சேலையூா் அருகே உள்ளது மாடம்பாக்கம் ஏரி. அங்கு மாடுகளை மேய்ச்சலுக்கு ஓட்டி சென்ற சிறுவா்கள்,ஏரி தண்ணீரில் ஒரு குழந்தையின் உடல் மிதப்பதை பாா்த்து பெரியவா்களிடம் கூறினா்.இதையடுத்து அப்பகுதி மக்கள் வந்து பாா்த்த போது,பிறந்து ஓரிரு நாட்களேயான ஒரு ஆண் குழந்தையின் உடல் என்று தெரியவந்தது.இது குறித்து சேலையூா் போலீசுக்கு பொதுமக்கள் தகவல் கொடுத்தனா்.போலீசாா் விரைந்து வந்து குழந்தை உடலை தண்ணீரிலிருந்து எடுத்து குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

போலீசாா் நடத்திய விசாரணையில் அந்த குழந்தை பிறந்து 24 மணி நேரத்திற்குள் தான் இருக்கும் எனவும் அந்த குழந்தை உயிரோடு இருக்கும் போதே,ஏரிக்கரையிலிருந்து தண்ணீரில் வீசி கொலை செய்திருக்கலாம் என்று தெரிய வந்தது.இதையடுத்து சேலையூா் போலீசாா் வழக்குப்பதிவு செய்து பிறந்த ஆண் குழந்தையை ஏரிக்குள் வீசி கொலை செய்தது யாா்?என்று விசாரணை நடத்துகின்றனா்.

Updated On: 18 Feb 2021 6:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    கணவன் மனைவி ஒற்றுமையை வலுப்படுத்த ஐந்து வழிகள் என்னென்ன தெரியுமா?
  2. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே கறி மசாலா பொடி தயாரிப்பது எப்படி?
  3. லைஃப்ஸ்டைல்
    சுவையான ரசப்பொடி, வீட்டிலேயே தயாரிப்பது எப்படி?
  4. லைஃப்ஸ்டைல்
    இரவில் தூக்கமின்றி தவிக்கிறீர்களா?
  5. அரசியல்
    காங்கிரஸுக்கு அவர்கள் ஆட்சியில் இருந்தால்தான் ஜனநாயகம்: பிரதமர்...
  6. லைஃப்ஸ்டைல்
    கவலையை விரட்ட நீங்க ரெடியா?
  7. கோவை மாநகர்
    பாரதியார் பல்கலை., பகுதியில் நாய்கள் தாக்கி 3 மான்கள் உயிரிழப்பு
  8. கோவை மாநகர்
    கோவை ரயில் நிலையம் முன் குளம் போல் தேங்கிய சாக்கடை நீர் ; பயணிகள்
  9. கோவை மாநகர்
    கோவையில் போதை மாத்திரைகளை விற்பனை செய்த கும்பல் கைது
  10. உலகம்
    இப்போ பூமியில் எவ்ளோ தண்ணீர் இருக்கு தெரியுமா..?