விவசாயிகளுக்கு இயற்கை வேளாண்மை பயிற்சி அளிக்கும் மாணவர்கள்

விவசாயிகளுக்கு இயற்கை வேளாண்மை பயிற்சி அளிக்கும் மாணவர்கள்
X

விவசாயிகளுக்கு இயற்கை வேளாண்மை பயிற்சி அளிக்கும் எஸ்.ஆர்.எம். வேளாண் அறிவியல் கல்லூரி மாணவர்கள்

பஞ்சகவ்யா, தசகாவ்யா, ஜீவாமிர்தம், நெல்லி கரைசல், பணை கரைசல், மீன் அமிலம் செய்யும் முறை பயன்படுத்தும் முறைகளை கற்று கொடுத்தனர்.

செங்கல்பட்டு மாவட்டம் அச்சிறுபாக்கம் அடுத்த பாபுராயன் பேட்டையில் இயங்கி வரும் எஸ்.ஆர்.எம். வேளாண் அறிவியல் கல்லூரியின் இறுதி ஆண்டு தோட்டக்கலை பயிலும் மாணவர்கள் பா.கிரீசன், வி.ஜான்டென்னிஸ், நா.சுரேஷ், ச.நரேன்சஞ்சய், ச.கீர்த்திவாசன், வெ.சந்தீப்சரண் ஆகியோர் அட்டவட்டம் ஊராட்சியில் அங்கக வேளாண்மை பற்றியும் அதன் முறைகளையும் விவசாயிகளுக்கு கற்று கொடுத்தனர்.

அத்துடன் அவர்களுக்கு இயற்கை விவசாயத்தில் இருக்கும் நுட்பங்கள், அதன் தனித்துவம் மற்றும் அதனை பயன்படுத்தும் முறையையும் கற்று கொடுத்தனர்.

மேலும் அவர்களுக்கு பஞ்சகவ்யா, தசகாவ்யா, ஜீவாமிர்தம், நெல்லி கரைசல், பணை கரைசல் மற்றும் மீன் அமிலம் செய்யும் முறையையும் அதனை பயன் படுத்தும் முறையையும் கற்று கொடுத்தனர்.

அத்துடன் அவர்கள் இயற்கை வேளாண்மை செய்வதால் ஏற்படும் நன்மைகள், அதில் வரும் இழப்புகள் மற்றும் அதில் இருந்து எப்படி மீள்வது என்பதை பற்றியும் அவர்களுக்கு எடுத்து கூறினர். இப்பகுதியில் இருக்கும் மக்களை இயற்கை வேளாண்மைக்கு தயார் செய்து, அவர்களை மேம்படுத்வதே எங்கள் நோக்கம் என்று மாணவர்கள் கூறினர்.

Tags

Next Story
ai and education