/* */

கொலை முயற்சியை தடுத்து நிறுத்திய போக்குவரத்து போலீசார்

கொலை முயற்சியை தடுத்து நிறுத்திய போக்குவரத்து போலீசார்
X



சென்னை செம்மஞ்சேரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட குமரன் நகர் பகுதியில் நடை மேம்பாலத்தின் மேல் நடந்து வந்து கொண்டிருந்த பாட்ஷா என்ற நபரை கோழி கார்த்திக், அருண் ஆகிய இரண்டு பேர் முன் விரோதத்தின் காரணமாக கொலை செய்யும் நோக்கத்தோடு தகராறு செய்து கத்தியால் வெட்டியுள்ளனர். இதனை கண்ட அவ்வழியாக வாகனத்தில் கடந்து சென்ற செம்மஞ்சேரி போக்குவரத்து ஆய்வாளர் சுகுமார் மற்றும் தலைமை காவலர் பிரகாஷ் ஆகியோர் உடனடியாக வாகனத்தை விட்டு இறங்கிச் சென்று வெட்டிக் கொண்டிருந்த இருவரையும் விரட்டிச் சென்றனர்.

இருப்பினும் காலில் வெட்டுப்பட்ட நிலையில் மயங்கி இருந்த நபரை மீட்டு உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தகவலறிந்து வந்த செம்மஞ்சேரி போலீசார் சம்பவத்தில் ஈடுபட்டு தப்பியோடிய நபர்களில் அருண் எனபவரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில் கடந்த தீபாவளி அன்று பாட்ஷா என்பவர் கார்த்திக் மற்றும் அருணை வெட்டியதாகவும் அதன் முன் விரோதம் காரணமாக கொலை செய்ய வந்ததாக தெரிவித்துள்ளனர். போக்குவரத்து போலீசாரின் துரித நடவடிக்கையினால் ஒருவரின் உயிர் காப்பாற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Updated On: 3 April 2022 7:15 AM GMT

Related News

Latest News

  1. தென்காசி
    தென்காசி மாவட்டத்திற்கு ரெட் அலர்ட்
  2. பூந்தமல்லி
    திருவேற்காட்டில் குடியிருப்புகளை அகற்ற எதிர்ப்பு: கண்ணில் கருப்பு துணி...
  3. நாமக்கல்
    கொல்லிமலை அருவிகளில் குளிக்கத் தடை: சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்
  4. நாமக்கல்
    நாமக்கல், திருச்செங்கோடு நகைக்கடையில் பணத்தை ஏமாந்தவர்கள் புகாரளிக்க...
  5. கல்வி
    அரசு கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்
  6. கீழ்பெண்ணாத்தூர்‎
    வேட்டவலம் அருகே கள்ளச்சாராய ஊறல் கொட்டி அழிப்பு: ஒருவர் கைது
  7. கலசப்பாக்கம்
    பருவதமலையில் புதிய இரண்டு இடி தாங்கிகள் பொருந்தும் பணி துவக்கம்
  8. வீடியோ
    தனிச்செயலாளர் மீது வழக்குப் பதிவு | Kejriwal-க்கு புதிய நெருக்கடி |...
  9. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  10. திருவண்ணாமலை
    அருணை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு...