/* */

கொரோனாவை அழிக்க ஸ்ரீ ஐஸ்வர்ய கோலவிழி அம்மன் கோயிலில் சிறப்பு பூஜை

ஒமிக்ரான் மற்றும் கொரோனாவில் இருந்து மக்களை பாதுகாக்க ஸ்ரீ ஐஸ்வர்ய கோலவிழி அம்மனுக்கு சிறப்பு மஹா ருத்ரா அபிஷேகம் நடைபெற்றது

HIGHLIGHTS

கொரோனாவை அழிக்க ஸ்ரீ ஐஸ்வர்ய கோலவிழி அம்மன் கோயிலில் சிறப்பு பூஜை
X

ஸ்ரீ ஐஸ்வர்ய கோலவிழி அம்மன் கோயிலில் கொரோனா தொற்றை அழிக்க சிறப்பு பூஜை நடைபெற்றது.

செங்கல்பட்டு மாவட்டம், சோழிங்கநல்லூர் அடுத்த கிழக்கு கடற்கரை சாலை வெட்டுவாங்கனி பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ ஐஸ்வர்ய கோலவிழி அம்மன் ஆலயத்தில் மஹா ருத்ரா அபிஷேகம் நடைபெற்றது.

சுமார் 22 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஆலயத்தில் இருக்கும் ஸ்ரீ ஐஸ்வர்ய கோலவிழி அம்மனை ஆயுர்தேவி என்று பக்தர்கள் அழைப்பார்கள் என்றும் எனவே உலகை அச்சுருத்தி வரும் ஒமிக்ரான் மற்றும் கொரோனா போன்ற நோய்களில் இருந்து மக்களை பாதுகாக்கப்பட இச்சிறப்புமிக்க விசேஷ ருத்ரா அபிஷேகம் நடைபெற்றதாக ஆலயத்தின் சார்பில் தெரிவித்துக் கொண்டனர்.

மேலும் அதனை தொடர்ந்து அம்மனுக்கு 11 விதமான அபிஷேகங்கள், மஹா தீபாரதனைகள், மஹா கணபதி பூஜைகள், மஹா சங்கல்பம் மற்றும் பல்வேறு பூஜைகளும் யாகங்களும் செய்யப்பட்டன. குறிப்பாக குழந்தையின்றி தவிக்கும் தம்பதிகளுக்கு குழந்தை வரம் கிடைப்பதாகவும், வேலையின்றி தவிப்பவர்களுக்கு வேலை கிடைக்கப்பெறுவதாகவும் மனக்குறையோடு வரும் பக்தர்கள் நிறைவோடு செல்லும் சிறப்பு ஸ்ரீ ஐஸ்வர்ய கோலவிழி அம்மன் ஆலயத்திற்க்கும் இருப்பதாக பக்தர்கள் தெரிவிக்கின்றனர்.

Updated On: 13 Dec 2021 12:15 PM GMT

Related News

Latest News

  1. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  2. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?
  3. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை புத்தகத்தின் புதிய அத்தியாயம், திருமணம்..! வாழ்த்துவோமா..?
  4. விளையாட்டு
    மும்பை இந்தியன்ஸ் ஆட்டம் குறித்து ரோஹித் ஷர்மாவின் முதல் எதிர்வினை
  5. சோழவந்தான்
    சோழவந்தான் திரௌபதி அம்மன் கோவிலில் கீசகன் வதம்
  6. லைஃப்ஸ்டைல்
    அரிதாய் கிடைத்த மனித பிறப்பை மகிழ்ந்து கொண்டாடுவோம் வாங்க..!
  7. லைஃப்ஸ்டைல்
    வீட்டின் தூண்களாய், உலகின் ஒளியாய் விளங்கும் மகளிர் தினச் சிறப்பு...
  8. காஞ்சிபுரம்
    தொடங்கியது வரதராஜ பெருமாள் திருக்கோயில் பிரம்மோற்சவம்
  9. லைஃப்ஸ்டைல்
    சிரிப்பும் சந்தோஷமும் நிறைந்த தமிழ் திருமண வாழ்த்துகள்!
  10. காஞ்சிபுரம்
    ஆதிசங்கரரின் உபதேசங்களை மொழிபெயர்க்க வேண்டும்..!