/* */

சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் குடியிருப்புகளை காலி செய்ய மறுத்து மறியல்

சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் குடியிருப்புகளை காலி செய்ய மறுத்து மக்கள் நடத்தி வரும் சாலை மறியல் போராட்டம் பரபரப்பாகி உள்ளது.

HIGHLIGHTS

சென்னை ஈஞ்சம்பாக்கத்தில்  குடியிருப்புகளை காலி செய்ய மறுத்து மறியல்
X

சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் குடியிருப்புகளை காலி செய்ய மறுத்து சாலை மறியல் போராட்டம் நடந்தது.

சென்னை கிழக்கு கடற்கரை சாலை ஈஞ்சம்பாக்கம் பெத்தேல் நகர் பகுதியில் சுமார் 5000 குடியிருப்புகளுக்கு படிவம் 6 கொடுக்க உள்ளதாகவும் அந்த படிவம் 6 கொடுத்த அடுத்த 3 நாட்களுக்குள் வீட்டை காலி செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்படும் என்பதால் அப்பகுதி மக்கள் ஏராளமானோர் வீடுகளை அகற்ற வேண்டாம் எனவும், பட்டா வழங்கிடவும், வருவாய்துறையினர் வெளியே செல்லும்படியும் கோஷமிட்டு சாலையில் அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் பள்ளி மாணவ, மாணவிகள், கைக் குழந்தைகளுடன் பெண்கள், ஆண்கள் என ஏராளமானோர் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.


சம்பவ இடத்திற்கு சென்னை கிண்டி கோட்டாட்சியர் யோகஜோதி மற்றும் சோழிங்கநல்லூர் வட்டாட்சியர் மணிசேகர் உள்ளிட்ட வருவாய்த்துறையினர் வந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் மக்கள் கலைந்து செல்ல மறுத்து தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

நீலாங்கரை உதவி ஆணையர் சுதர்சன் தலைமையில் ஏராளமான போலீசார் அசம்பாவிதம் ஏற்படாமல் இருக்க பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

வீடு வீடாக சென்று படிவம்-6 கொடுக்க சுமார் 50 வருவாய்த்துறை அதிகாரிகள் ஈஞ்சம்பாக்கம் பகுதிக்கு வந்ததால் பரபரப்பான சூழல் நிலவுகிறது.

Updated On: 10 Jan 2022 6:43 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அலைகளற்ற ஆழ்கடல், அப்பா..!
  2. லைஃப்ஸ்டைல்
    காதல் என்றால் ரொமான்ஸ் இல்லாமலா..?
  3. திருவண்ணாமலை
    சென்னையில் இருந்து திருவண்ணாமலைக்கு ரயில் சேவை துவக்கம்; மீண்டும்...
  4. லைஃப்ஸ்டைல்
    விழிகள் வழியே இதயம் தொட்ட உணர்வுகள்..!
  5. விளையாட்டு
    மார்க்ரம் ஏன் ஒதுக்கப்பட்டார்? சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தின் முடிவு சரியா?
  6. இந்தியா
    சூரத் பொது யோகா பயிற்சியில் 7000-க்கும் மேற்பட்ட யோகா ஆர்வலர்கள்
  7. பல்லடம்
    பல்லடத்தில் மாவட்ட அளவிலான கைப்பந்து போட்டி
  8. வீடியோ
    மதமாற துன்புறுத்தப்பட்ட பெண் | Fadnavis செய்த அதிர்ச்சி சம்பவம்|...
  9. இந்தியா
    ஐநா நிகழ்ச்சியில் பங்கேற்கும் இந்திய பெண் பிரதிநிதிகள்
  10. காங்கேயம்
    வெள்ளகோவில்; கோழிக்கடையில் ரூ. 50 ஆயிரம் திருடியவா் கைது