கழிவுநீர் தொட்டி சுத்தம் செய்தபோது ஒருவர் சாவு: ஆபத்தான நிலையில் ஒருவர்

கழிவுநீர் தொட்டி சுத்தம் செய்தபோது ஒருவர் சாவு:  ஆபத்தான நிலையில் ஒருவர்
X

சுத்தம் செய்ய இறங்கிய கழிவு நீர் தொட்டி.

கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்த போது விஷவாயு தாக்கி ஒருவர் உயிரிழந்தார். ஒருவர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

சென்னை கிழக்கு கடற்கரை சாலை, ஈஞ்சம்பாக்கம் சேஷாத்ரி அவென்யூவில் ராஜன் சையல்(67), என்பவரது வீட்டின் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்வதற்காக முத்துகுமார்(30), திராவிடvகதிரவன்(எ)அப்பு(30) வந்தனர். அவர்கள் இருவரும் இறங்கி சுத்தம் செய்த போது விஷவாயு தாக்கி மயங்கியுள்ளனர்.
பின்னர் துரைப்பாக்கத்தில் இருந்து தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து இருவரையும் மீட்டனர். மீட்கப்பட்ட முத்துகுமார் என்பவரை 108 ஆம்புலன்ஸ் மூலம் அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவர் அங்கு சிகிச்சை பெற்று வருகிறார். அப்பு என்பவரை போலீசார் ஜிப்சி வாகனத்தில் அழைத்து சென்று சோதித்த போது ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பாக நீலாங்கரை போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Tags

Next Story