மேடவாக்கத்தில் கால்வாய் பணியால் குடிநீர் குழாய் சேதம்

மேடவாக்கத்தில் கால்வாய் பணியால் குடிநீர் குழாய் சேதம்
சேதம் அடைந்த குடிநீர் குழாய்களை உடனடியாக சரிசெய்ய வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

மேடவாக்கம் பிரதான சாலையில் மழைநீர் வடிகால் கால்வாய் பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்த பணியின்போது மேடவாக்கம் ஊராட்சி 1-வது வார்டுக்கு உட்பட்ட பெரியார் நகரில் உள்ள ராமதாஸ் தெரு ராமதாஸ் குறுக்கு தெரு, சோழன் தெரு, பாண்டியன் தெரு ஆகிய இடங்களுக்கு செல்லும் குடிநீர் குழாய்கள் முற்றிலும் சேதம் அடைந்தன. 8 மாதத்திற்கு மேல் ஆகியும் குடிநீர் குழாய் சீரமைக்கப்படவில்லை. இதனால் அப்பகுதிகளில் வசிக்கும் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் குடிநீர் இல்லாமல் அவதிப்பட்டு வருகின்றனர்.

இது குறித்து அப்பகுதி மக்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. இந்த நிலையில் 1-வது வார்டு உறுப்பினர் அம்மு கிருஷ்ணமூர்த்தி ஏற்பாட்டில் லாரிகள் மூலம் அப்பகுதி மக்களுக்கு குடிதண்ணீர் சப்ளை செய்யப்பட்டு வருகிறது.

சேதம் அடைந்த குடிநீர் குழாய்களை உடனடியாக சரிசெய்ய வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

Tags

Next Story