/* */

வெறும் காலில் வந்த மூதாட்டி: போக்குவரத்து தலைமை காவலரின் மனிதநேயம்

வெறும் காலில் நடந்து வந்த மூதாட்டியின் நிலை அறிந்து, அவருக்கு செருப்பு வாங்கி தந்த போக்குவரத்து தலைமை காவலரை பலரும் பாராட்டி வருகின்றனர்.

HIGHLIGHTS

வெறும் காலில் வந்த மூதாட்டி: போக்குவரத்து தலைமை காவலரின் மனிதநேயம்
X

மூதாட்டியிடம் அக்கறையோடு விசாரித்த போக்குவரத்து தலைமை காவலர் ஜான்சன் புருஸ்லீ, பின்னர்  செருப்பு வாங்கிக் கொடுத்தார்.

சென்னை சோழிங்கநல்லூர் சந்திப்பில் பணியில் இருந்த போக்குவரத்து தலைமை காவலர் ஜான்சன் புருஸ்லீ என்பவர் அவ்வழியே கடும் வெயிலில் நடந்து வந்த வயதான மூதாட்டியை பார்த்துள்ளார். அந்த மூதாட்டியும், வெயிலின் தாக்கத்தினால் போக்குவரத்து போலீசார் பணியில் ஈடுபட்டிருந்த இடத்தில், சிறிது நேரம் இளைப்பாற அமர்ந்துள்ளார். போக்குவரத்து போலீசார், மூதாட்டியை பார்த்ததும் கையில் இருந்த 20 ரூபாய் பணத்தை கொடுத்துள்ளார்.

பேச்சுக் கொடுத்துக் கொண்டிருந்த மூதாட்டி, வெயில் அதிகமாக உள்ளது. கால் சுடுவதாக கூறியுள்ளார். இந்த பேச்சைக் கேட்ட போக்குவரத்து தலைமை காவலர், சிறிது நேரத்தில் ஒருவரை அனுப்பி காலணி வாங்கி வந்து மூதாட்டிக்கு அணிவித்து அனுப்பி வைத்தார். மூதாட்டியோ இரு கைகூப்பி வணங்கி சென்றார்.

எந்த உதவி வேண்டுமானாலும் தயங்காமல் கேளுங்கள். இங்குள்ள இரண்டு சிக்னலில் தான் இருப்பேன் என மூதாட்டியிடம் போலீசார் கூறியுள்ளார். உதவுவதில் பலவிதம் உள்ளது. தேவையறிந்து உதவிய போக்குவரத்து தலைமை காவலரை, பலரும் பாராட்டி வருகின்றனர்.

Updated On: 29 March 2022 12:15 AM GMT

Related News

Latest News

  1. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  2. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  3. நாமக்கல்
    கொல்லிமலையில் 13 செல்போன் டவர்களை செயல்படுத்த பாஜ. கோரிக்கை
  4. தென்காசி
    தென்காசி மாவட்டத்திற்கு ரெட் அலர்ட்
  5. பூந்தமல்லி
    திருவேற்காட்டில் குடியிருப்புகளை அகற்ற எதிர்ப்பு: கண்ணில் கருப்பு துணி...
  6. நாமக்கல்
    கொல்லிமலை அருவிகளில் குளிக்கத் தடை: சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்
  7. நாமக்கல்
    நாமக்கல், திருச்செங்கோடு நகைக்கடையில் பணத்தை ஏமாந்தவர்கள் புகாரளிக்க...
  8. கல்வி
    அரசு கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்
  9. கீழ்பெண்ணாத்தூர்‎
    வேட்டவலம் அருகே கள்ளச்சாராய ஊறல் கொட்டி அழிப்பு: ஒருவர் கைது
  10. கலசப்பாக்கம்
    பருவதமலையில் புதிய இரண்டு இடி தாங்கிகள் பொருந்தும் பணி துவக்கம்