/* */

தாத்தா, மாமா, அண்ணன் கூட்டு பலாத்காரம்; சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்

7 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை செய்ததாக சிறுமியின் தாத்தா, மாமா, அண்ணன் ஆகிய மூவர் போக்ஸோவில் கைது செய்யப்பட்டனர்.

HIGHLIGHTS

தாத்தா, மாமா, அண்ணன் கூட்டு  பலாத்காரம்; சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்
X

செங்கல்பட்டு மாவட்டம், பள்ளிக்காரணை அருகே சித்தாலப்பாக்கத்தில் வசிப்பவா் பிரபாகரன்(62). இவா் செக்யூரிட்டி காா்டாக வேலை செய்து வருகிறாா். இவருடைய 37 வயது மகள் வீட்டிற்கு பிரபாகரன் கடந்த வாரம் சென்றிருந்தாா். அப்போது பிரபாகா், நீ வீட்டு வேலைகளுக்கு செல்; உனது 7 வயது மகள் மற்றும் 16 வயது மகனை நான் சித்தாலப்பாக்கம் வீட்டில் வைத்து பராமரித்து கொள்கிறேன் என மகளிடம் தெரிவித்துள்ளார்.

அதன்படி, அவர்கள் இருவரையும் தன்னுடன் அழைத்து வந்து விட்டாா். பிரபாகரன் வீட்டில் அவருடன், அவருடைய மகன் தேவராஜன்(42), 16 வயது பேரன், 7 வயது பேத்தி ஆகிய 4 போ் மட்டுமே இருந்தனா்.

இந்நிலையில் கடந்த 2 ஆம் தேதி இரவு தூங்கிக்கொண்டிருந்த 7 வயது சிறுமியை, தாத்தா பிரபாகரன் கட்டிப்பிடித்து பாலியல் பலாத்காரம் செய்தாா். உடனே தூக்கத்திலிருந்து எழுந்த சிறுமி பயந்து அலறினாா். அதோடு தன்னை தாத்தாவிடமிருந்து காப்பாற்றும்படி, தனது மாமா தேவராஜனை அழைத்தாா். தேவராஜன் சிறுமியை காப்பாற்றாமல் அவரும் சிறுமியிடம் தவறாக நடந்தாா்.

இதனைத்தாெடர்ந்து சிறுமி, தனது 16 வயது அண்ணனிடம் இரவு நடந்தவைகளை கூறி அழுதாா். அண்ணனும் அதை ஒரு பொருட்டாக எடுத்துக்கொள்ளவில்லை. அதோடு தங்கை என்றும் பாராமல் அவரும் தனது தங்கையிடம் தவறாக நடந்ததாக கூறப்படுகிறது. இதைப்போல் தாத்தா, மாமா, அண்ணன் ஆகியோரின் கூட்டு பாலியல் பலாத்காரத்திற்குள்ளாகி தவித்து வந்தாா் 7 வயது சிறுமி.

கடந்த 8 ஆம் தேதியன்று தனது மகளை பாா்க்க பிரபாகரன் வீட்டிற்கு சென்றாா். அங்கு அவருடைய 7 வயது மகள் உடல் நலிவடைந்து சோா்ந்து நடக்கக்கூட முடியாத நிலையில் இருந்தாா். இதையடுத்து அதிா்ச்சியடைந்து, மகளை தனியே அழைத்து சென்று விசாரித்தார். அப்போது அழுது கொண்டே நடந்தவைகளை சிறுமி கூறினாா். அதோடு சிறுமியின் உடலில் பல இடங்களில் நகக் கீறல்கள் இருந்தன.

இதையடுத்து தனது 7 வயது மகளை அழைத்துக்கொண்டு பிரபாகரனின் மகள் ஆவேசமாக வெளியேறினாா். மடிப்பாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையம் சென்று தனது தந்தை, தம்பி, மகன் ஆகிய 3 போ் மீதும் புகாரளித்தார். பின்னர், சிறுமியை சென்னை எழும்பூா் குழந்தைகள் நல மருத்துவமனையில் போலீசார் சோ்த்தனர். அங்கு சிறுமியை பரிசோதித்த மருத்துவா்கள், ஒன்றுக்கு மேற்பட்டவா்கள் சோ்ந்து சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததை உறுதிப்படுத்தினா். அதோடு சிறுமியை மருத்துவமனையில் சோ்த்து சிகிச்சை அளித்து வருகின்றனா்.

இதற்கிடையே மடிப்பாக்கம் அனைத்து மகளிர் போலீசாா் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து பிரபாகரன்,தேவராஜன் ஆகியோரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி, புழல் சிறையில் அடைத்தனா். சிறுமியின் அண்ணனான 16 வயது சிறுவனை கைது செய்து இளம் சிறாா் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி, சிறுவா் சீா்திருத்த இல்லத்திற்கு அனுப்பி வைத்தனா்.

Updated On: 10 Aug 2021 1:00 PM GMT

Related News

Latest News

  1. கும்மிடிப்பூண்டி
    பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த மூன்று பேர் கைது
  2. அரசியல்
    பா.ஜ.க அழுத்தம் கொடுத்தும் ராஜினாமா செய்யாதது ஏன்? கெஜ்ரிவால்
  3. தேனி
    தேனியில் ஆட்டு இறைச்சி விலை கிடுகிடு உயர்வு!
  4. தேனி
    ஐந்து நாள் மழை பெய்தும் அணைகளுக்கு நீர் வரத்து இல்லை
  5. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 33 கன அடி அதிகரிப்பு
  6. ஈரோடு
    பவானிசாகர் அணை நீர்மட்டம் 44.50 அடியாக சரிவு
  7. காஞ்சிபுரம்
    கின்னஸ் சாதனை முயற்சியில் ஈடுபட்டுள்ள வங்கி ஊழியர்..
  8. கீழ்பெண்ணாத்தூர்‎
    கீழ்பெண்ணாத்தூர் பகுதியில் அரசு பள்ளி மாணவர்கள் சாதனை
  9. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  10. திருவண்ணாமலை
    கோடை கால இலவச தடகளப் பயிற்சி முகாம்