/* */

பெருங்குடி குப்பை கிடங்கில் 5 மணி நேரத்திற்கும் மேலாக எரிந்த தீ

பெருங்குடி குப்பை கிடங்கில் 5 மணி நேரத்திற்கு மேலாக நீடித்த தீயை, கட்டுப்படுத்த முடியாமல் தீயணைப்புத் துறையினர் திணறினர்.

HIGHLIGHTS

பெருங்குடி குப்பை கிடங்கில் 5 மணி நேரத்திற்கும் மேலாக எரிந்த தீ
X

பெருங்குடி குப்பை கிடங்கில் ஏற்பட்ட தீ.  

சென்னை துரைப்பாக்கம் ரேடியல் சாலையில் உள்ள பெருங்குடி குப்பை கிடங்கில், இன்று மாலை 3 மணியளவில், பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. குப்பைகளை தரம் பிரித்து உரமாக்கும் இடத்தில் தீப்பிடித்துள்ளதால் தீ மளமளவென பரவி வந்தது.

மேலும் வெயில் சுட்டெரிப்பதாலும் கொளுந்து விட்டு எரியும் தீயிலிருந்து புகை வானுயரத்திற்கு சென்றது. இதையடுத்து, திருவான்மியூர், துரைப்பாக்கம், மற்றும் மேடவாக்கத்திலிருந்து மூன்று தீயணைப்பு வாகனங்களில் வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்க போராடினர்.

மாலையில், 5 மணி நேரத்திற்கு மேலாக எரிந்த தீ, காற்றின் வேகம் அதிகமாக இருப்பதால் குப்பை கிடங்கின் மற்ற பகுதிகளுக்கும் பரவியது. தீயினை கட்டுப்படுத்த முடியாமல் தீயணைப்பு வீரர்கள் திணறினர். இதனால், அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

Updated On: 27 April 2022 12:45 PM GMT

Related News

Latest News

  1. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்டத்தில் இன்றைய காய்கறி விலை
  2. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  3. ஆரணி
    ஆரணியில் பள்ளி வாகனங்கள் ஆய்வு
  4. திருவண்ணாமலை
    ஆட்டோ ஓட்டுனர் நலச்சங்கம் சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு
  5. திருவண்ணாமலை
    லாரியின் முன் விழுந்த சுகாதார ஆய்வாளர் உயிரிழப்பு
  6. நாமக்கல்
    தட்டுப்பாடின்றி குடிநீர் வழங்க உடனடி நடவடிக்கை: அதிகாரிகளுக்கு...
  7. கலசப்பாக்கம்
    செய்யாற்றின் குறுக்கே உயர்மட்ட பாலம்: கூடுதல் தலைமைச் செயலாளர் ஆய்வு
  8. திருவண்ணாமலை
    பள்ளி வாகனங்களை வேகமாக இயக்கினால் கடும் நடவடிக்கை: கலெக்டர்
  9. நாமக்கல்
    ராசிபுரத்தில் தெருநாய்கள் கடித்ததில் 3 சிறுவர்கள் காயம்:...
  10. திருவண்ணாமலை
    கோடை காலத்தில் கால்நடைகளை பராமரிக்கும் முறைகள்