Begin typing your search above and press return to search.
மேடவாக்கத்தில் மின்சாரம் தாக்கி 3 பசு மாடு, 2 கன்று குட்டிகள் பலி
மேடவாக்கத்தில் உயர் மின்னழுத்த கம்பி அறுந்து விழுந்து மின்சாரம் தாக்கி, மாடுகள் பலியாகின.
HIGHLIGHTS
சென்னை பள்ளிகரணை அடுத்த மேடவாக்கம், ரவி மெயின் ரோட்டில், உயர் மின்னழுத்த கம்பியானது அறுந்து விழுந்து கிடந்துள்ளது. அப்போது, மேய்ச்சலுக்காக சென்று கொண்டிருந்த 3 பசு மாடுகள், மற்றும் இரண்டு கன்று குட்டி உட்பட 5 மாடுகள், இந்த மின்கம்பியை மிதித்துள்ளன. இதில் மின்சாரம் பாய்ந்து, நிகழ்விடத்திலேயே மாடுகள் பரிதாபமாக உயிரிழந்தது. இதனால் அப்பகுதியில் பாதுகாப்பு கருதி மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது.
மழைக்காலத்தில் உயர் மின்னழுத்த கம்பியானது அறுந்து விழுந்து மாடுகள் உயிரிழந்திருப்பது அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து மேடவாக்கம் மின் வாரிய அலுவலகத்தில் கேட்ட போது காற்றினால் இரு கம்பிகள் உரசி அறுந்து விழுந்திருக்கலாம் என விளக்கம் அளித்தனர். சம்பவம் தொடர்பாக பள்ளிகரணை போலீசார் விசாரித்து வருகின்றனர்.